அன்றொரு நாள்
தனிமை என்னை
தின்னத் தொடங்கியது
வெறுமையை முதன் முதலாய்
எதிர்கொள்கிறேன்
என் சிறகுகள் சிதைக்கப் பட்டதை
உணர்கிறேன் "நான்"
தூக்கம் என்னை விட்டு
வெகு தூரத்தில்
ஏன் இப்படி ?
கேள்விக்குப் பதில் இல்லை
சில சமயம் கேள்வியே இல்லை
சட்டென்று ஒருநாள்
தனிமை தந்தது வரம்
"குருவின்" அறிமுகம்
அவனால் தனிமையும் ஒருசுகம்
என்னை
சிந்திக்க,
சிரிக்க,
ரசிக்க,
வியக்க,
நேசிக்க தொடங்கினேன்
என் "நானோடு" அல்ல
"நான்" அவனோடு
3 comments:
how is it possible
By
R.Hema
வணக்கம் ஹேமா, சில உணர்வுகளை, உறவுகளை
அனுபவிக்க மட்டுமே முடியும்.கடலுள்ளிருக்கும் மீனுக்கு உங்களால் கடலைக் காட்ட முடியுமா?. அதை வார்த்தையாக்க நினைத்தால் அந்த உணர்வை அசிங்கப்படுத்தி விடுவோமோ என்ற பயம் எனக்குண்டு
thank you master for your kind reply
r.hema
Post a Comment