Total Pageviews

Thursday, September 1, 2016

நுண்மான் நுழைபுலம்........







நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.  


நண்பர்களே , 

கல்லாமை எனும் அதிகாரத்தில்  ஞான ஆசான்  வள்ளுவன்  கூறிய   குறுகத்தரித்த  குறளே   இது.....

இந்தக் குறளுக்கு   நமது  பெரியவர்கள் கொடுத்த தெளிவுரையை  கூகுளாரின் உதவியோடு   இங்கு காண்போம்.......
நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.
சாலமன் பாப்பையா
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.
கலைஞர்
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புணையப்பட்ட பாவை போன்றது.
மு.வரதராசன்

'கல்லாமை" எனும் "அதிகாரத்தில்"  ஐயன்  வள்ளுவன் கொடுத்த இந்தக்   குறளை  "யோகக் கண்கொண்டு "பார்க்கும் பொழுது  எனக்கு உணர்த்தப் பட்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம்....

அறிவு என்றால் என்ன????

வள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்....

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்கல் ஆகா அரண். (421) 


இறுதிக்காலம் வரையும் மரணத்தருவாயிலிலும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; எம படராகிய பகைவர் இந்த உடலுக்குள் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையே "அறிவு "...........



நண்பர்களே, கல்வி என்றால் என்ன??????

ஜீவனை சிவமாக்கும் "சாகாக்கல்வியே " இங்கு கல்வியாகப் போற்றப்படுகிறது.....  சாவை வெல்லமுடிகிற அறிவே இங்கு அறிவாகப் போற்றப்படுகிறது....பிற அறிவெல்லாம் இங்கு வெற்று அறிவாகவேப் பார்க்கப்படுகிறது.....

"நுண்மான் நுழைபுலம் " என்றால் என்ன?????

இங்குதான்  யோக ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்  வள்ளுவர்...

எண்சான் உடலுக்கும் பிரதானமாகிய சிரசில்  ,.....அதாவது நம்முடைய தலையில்  நுண்ணிய  மாட்சிமையுடைய  ஒரு துவாரம் ,  ஒரு சிறிய துளை உள்ளது....அந்தத்  துளையில்  "வாசியாகிய"  பிராணனை  நுழைத்துச் செலுத்தக்கூடிய  அறிவினைப் பெற்ற யோகியர் "மரண மடைவதில்லை"   .....ஜீவனை  சிவமாக்கி    ஆதியாகிய சிவத்துடன்  ஒன்றி   ஜீவ  சமாதியாகி விடுகின்றனர்.....

சிரசில்  உள்ள  இந்த நுண்ணிய  மாண்புடைய  துவாரத்தில்  "வாசியாகிய" பிராணனை நுழைவிக்கும் அறிவைப்  போதிக்கும்   யோகக்கல்வியே   இங்கு உண்மைக்கல்வியாக , "நுண்மான் நுழைப்புலமாக"   'சாகாக் கல்வியாகப்" போற்றப்படுகிறது.....பிற  கல்வி கற்றவர்கள்  இங்கு நிரம்பக்   கற்றிருந்தாலும்   கல்லாதவர்களாகவேப்  பார்க்கப்படுகிறார்கள்.....

மண்ணால்  செய்யப்பட்ட இந்த உடலை  விண்ணாய் , ஒளியாய் ... மாற்றுவதே  இந்த  சாகாக்கல்வியின்   இலட்சியம்......பரிமாணத்தில்  பிற உயிர்களுக்கு  இல்லாமல்  நமக்கு  மட்டும்  மனித  சரீரம்   வாய்க்கப்பெற்றதே இந்த இலட்சியத்தை  நிறைவேற்றிக்  கொள்ளத்தான் .........அறியாமையினால் வயிறு  வளர்க்கும்  ("மெக்காலே" ) பாடத்தைப்   பயில்பவர்கள்  அழகிய  மண் பொம்மைக்கு  ஒப்பானவர்கள்  என்கிறர்  அய்யன்  வள்ளுவர்....


நமது  தலையில்  உள்ள  இந்த  சிறிய  துவாரம் சித்தர்களால்  
"மயிர்ப்பாலம் "   "சுழிமுனைக்கதவு"  "நெருப்பாறு"  "நூல்பாலம்" "ஞானவாசல்"  என வர்ணிக்கப்பபடுகிறது....


நெற்றிக்கு நேர் உள் நின்றதும் 

நேரான உட்பாறை யுடைத்ததும் 

நெருப்பாறு மயிர்ப்பாலம் கடந்ததும் 

நெஞ்சில் யமவாதை நீக்கியதும் நாமே! நாம்.   

                                                                              என்கிறர்  ,....பரஞ்சோதி மகான்...


வல்லோர்கள் பார்ப்பார்கள் வாட்டியன்தானாய் வாய்க்குமோ யெல்லோர்க்கும் எளிதாச்சோஞானம்
பல்லோர்கள் மாயமாய்கை வாட்டியத்தான்பார் பாங்கான மயிர்ப்பாலம் செதுப்பாதுந்தாண்டித்
தல்லோர்கள் வாசினையைத் தவிடுபொடியாக்கி தரிக்கின்ற வாசியைத்தான் சாதனம்பண்ணி
மல்லோர்கள் மார்க்கமாய் ஆறுதளம் தாண்டி மந்திரியாமர்க்கடக மழிந்துபோமே
                                                                                 
                                                                         என்கிறார்     போகமகரிஷி........


அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்

சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்

நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்

எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.


                                                                                என்கிறார் சிவவாக்கியார்..........


நண்பர்களே,......நுண்மான் நுழைபுலம்  தெரிந்து கொண்டோம்........தக்க ஞான குருவை அணுகி  "உணர்ந்து"  கொள்ளுங்கள்.....