Total Pageviews

Thursday, April 3, 2014

சுகந்த முத்திரை.


வணக்கம் நண்பர்களே!!!!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத்துவ முத்திரைகள் குறித்த ஒரு தொடரை பதிவிடலாம் என நினைக்கிறேன்.....குருவருள் துணை புரியும் என நம்புகிறேன்...
     
நோய் ஏற்படுவதற்கு உடலிலுள்ள கழிவுகளே முக்கிய காரணம் என்பதை யோக வகுப்புகளில் நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்......அதிலும் சிறுநீர் சரியாக வெளியேறாவிட்டால் உடலின் பித்தம் அதிகமாகி மன அழுத்த நோய்களை உண்டாக்கும் என்பதையும் பார்த்திருக்கிறோம்.....

கோடைகாலம் தொடங்கிவிட்டது, நமது உடலின் வியர்வைச் சுரப்பிகளின் செல்பாடு நன்றாக இருந்தால்தான் பித்த தோஷத்தை சமன் செய்து வெப்பு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்...பஞ்ச பூதத்தில் நீரின் செல்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம்....நீர் கழிவு சரியாக வெளியேறாவிடில், ஜலதோஷம், சைனஸ், சூட்டு ஆஸ்துமா ,.....அம்மை, சூட்டுக் கட்டிகள், வெடிப்புநோய்கள் போன்றவை உண்டாகலாம்....மேலும் நீர் கழிவு சரியாக வெளியேறாவிடில் வியர்வையில் நாற்றம் உண்டாகும்......இந்த வியர்வை நாற்றத்தைப்போக்க முக்கியமான ஒரு மருத்துவ முத்திரைதான்   "சுகந்த முத்திரை".

                                          "வேகாத மண்ணும் சுடும்பாரு
                                            பாரே மயங்கிய மந்திர நீரு
                                            மடங்கித்தழையும் மற்றிரண்டும்
                                            சுகந்தமே சுந்தர தேகமாச்சு"

என யோக முத்திரை குருமார்களால் போற்றப்பட்ட சுகந்த முத்திரையை அப்பியாசம் செய்வதால் கோடைகால வியர்வை துர்நாற்றம் குறைவதோடு உடலின் நீர்பூதக் குறைபாடுகளையும் சமன் செய்யமுடியும்....நாற்றமடிக்கும் உடலை மணக்கச்செய்யும் முத்திரை  என இந்த முத்திரை பற்றிய செய்திகள் சித்தர் பாடல்களில் காணக்கிடைக்கிறது.

சரி .....இந்த சுகந்த முத்திரையை எப்படி செய்வது எனப்பார்ப்போமா?????

கடைசி இரண்டு விரல்களையும் மடக்கி உள்ளங்கையில் ஊன்றவும்.பெருவிரலின் நுனியை, மோதிர விரலின் பக்கவாட்டுப் பகுதியில் வைக்கவும். மற்ற இரண்டு விரல்களையும் இணைத்து பெருவிரலின் மேல் பதியவைத்து நுனிகளை நேராக நீட்டவும்.

எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற சந்தேகம் வருமே... முத்திரை வைத்துக்கொண்டு" பஞ்ச பூத சங்கமம் " சுவாசம்  மூன்று முறை செய்யலாம் ...காலை மாலை இரு வேளையும் செய்யலாம்..

மீண்டும் சந்திப்போமா.


Monday, March 31, 2014

காலம்





நிதமும் நீ கடந்து போன ஒவ்வொரு நொடியும் எனக்குத் திரும்பி கிடைக்காதாவென ஏக்கத்துடனே கடந்து போகிறேன்.....!!!! 

விடியலில் ஆரம்பிக்கும் உன்னின் துரத்தல் நன்பகல் பகல் பிற்பகலென விரிந்தே என்னையும் உன்னோடு சேர்த்து கொண்டே.....!!!!


எப்போதுமே என்னுடன் பயணிக்கிறாய்
இருட்டில் கூட மறைந்து போகும் எந்தன்
நிழலும் இன்னொரு முகமானதாய்....!!!!


நொடி வினாடி நிமிடத்தில் ஜனித்தே
மணியாய் நாளாய் வாரமாய் மாதமாய்
வருடமாய் என்னின் வரமாய்.....!!!!


பிறிதொரு நாளின் துவக்கத்தில் எனக்குள்
அவதியும் அவசரமும் படபடப்புமாய்
தவிப்பும் சேர்த்தே உன்னை உணரவைத்தாயே....!!!!


ஒவ்வொரு நாளும் என்னை அழகுபடுத்துகிறாய்
அடுத்தொரு நாளில் என்னை அவதிக்குள்ளாக்கியே
பிறப்பின் தவத்தை எனக்குள் புகட்டினாயே..!!!!!


வருடங்கள் நகர நகர என்னுள் ஒரு பெரியதோர்
மாற்றமதை நிகழ்த்திவிட்டு நகர்ந்து விடுகிறாய்
ஏதுமறியா கள்வனாய் அருவமாய் அகன்றே....!!!!


காலமே உன்னை வணங்குகிறேன் ஒவ்வொரு
நாளும் என்னைப் புதுப்பித்தே வழியனுப்புகிறாய்
எனக்குள் இருக்கும் வலிகளை வடிகட்டியே....!!!!


எதையும் தாங்கும் வலிமையதை வலியால்
உணர்த்தியே என்னை இறுக்குகிறாய்
இறுகிப்  போகிறேன் இறுமாப்பாய்/...!!!!

Wednesday, March 19, 2014

நமை நாமே வெல்வீரா?????

ஒளிவீசும் விழியிரண்டும் ஒளியின்றி ஆனதென்ன!
ஒலிகேட்கும் செவியிரண்டும் ஒலியின்றிப் போனதென்ன!!
செவியிரண்டும் விழியிரண்டும் செயலிழந்து போனதனைக்
கவிவழியே மரபோடு கவிஞனிவன் பாடுகிறேன்!!
உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா!
உடலென்ன உறவென்ன எல்லாமே மறக்குதடா!!
காலிரண்டு மூன்றாகி காலங்கள் மொட்டாக!
மேலிருந்து அழைப்புவர மூன்றுகால் எட்டாக!!
மீளாத தூக்கத்தில் மூழ்கிவிட்ட தசைப்பந்து!
காலனாலே காலமாகி கவிபாடும் இசைச்சிந்து!!
ஒருதுளி விந்ததுவே அண்டத்தோடு கலந்துவிட
கருவானாய் தாய்வயிற்றில் கல்லறையில் மலர்ந்துவிட!
பிறந்தபோது பேர்வைத்துப் புகழ்கின்றார் பெற்றோர்!
இறந்தபோது பிணமென்று இகழ்கின்றார் உற்றார்!!
ஏனிந்த மாற்றமென்று எவரேனும் சொல்வீரா?
‘நான்யார்?’ தெரிந்துகொண்டு நமைநாமே வெல்வீரா?