- தூணிலும் ,துரும்பிலும் உணரமுடியாத இறை இருப்பை மனம் பேசுவதை நிறுத்தும்போதே உணரமுடிகிறது.....
- Master Shiva “எண்ணங்களே மனம் யாவினும் நானெனும் எண்ணமே மூலமாம் உந்தீபற; யானாம் மனம் எனல் உந்தீபற” "
- Master Shiva வளியுள்ளடக்க வலைபடு புட்போல் உளமும் ஒடுங்குறும் உந்தீபற : ஒடுக்க உபாயமிது உந்தீபற"
- Master Shiva மதி , நம்முடைய சுவாசத்திற்கும் மனதிற்கும் நேரடியான தொடர்பு உள்ளது .....சுவாசம் ஒடுங்க மனம் ஒடுங்குகிறது.,மனம் ஒடுங்க சுவாசம் ஒடுங்குகிறது.....இதையே திருமூலரும் மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை என்கிறார்.........இதையே யோக குரு பதஞ்சலியும் ."சலே வாதம் சலே சித்தம் நிச்சலம் நிச்சல பவதி"என்கிறார்.......
- Master Shiva வளி என்றால் காற்று .....மூச்சுக்காற்றைப் பிடிக்கும் "பிராண ஆயமப் " பயிற்சியை மேற்கொள்ளும்போது "புள்" என்று சொல்லக்கூடிய பறவையானது எப்படி வலையில் மாட்டிக்கொள்ளுமோ அதுபோல இந்த மனமும் வலையில் மாட்டிக்கொள்ளும் என்கிறார் ........ரமண பகவான்.
- Yoga Kumaran ரேசகம் (மூச்சை வெளியே நிறுத்துதல்) இதை தெளிவாக உணர்த்தும், அருமையான பதிவு, குறிப்புகளோடு உணர்த்தியது இன்னும் சிறப்பு
- Master Shiva நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை யோக குமரன் சார்......எனக்கும் உங்களுக்கும் குருமார்கள் போட்ட பிச்சை அவங்க சொன்னதை நாம் சொல்கிறோம்........பாம்பின் "கால்" பாம்பறியும்.....
- Mathi Vanan அன்னையின் வயிற்றில் இருக்கும் குழந்தை சுவாசிப்பது இல்லையே, பிறந்தவுடன் அக்குழந்தைக்கு மூச்சு விட யாரும் சொல்லி கொடுப்பதில்லை....
- Yoga Kumaran ஆம் ஐயா, குருவே நம்மை விதை நெல்லாய் மாற்றும் வித்தை அறிந்தவர். என்குரு கோடிசாமிகளின் திருவடிகளே எனக்கான ஞான வகுப்பறை
- Master Shiva மதி, குழந்தை மூச்சை வெளிவிடவில்லை அதனால்தான் "குழந்தையும் தெய்வமும்" ஒன்று என்கிறோம்......நாம் மூச்சை வெளிவிடுகிறோம்......அதனாலேயே நமக்கு சித்தம் விருத்தியாகி மனச்சலனம் உண்டாக்கிறது.....ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றை பிடிக்கும் கணக்கு நமக்கும் தெரிந்தால் நாமும் குழந்தையாக மாறி இறை நிலையை எட்ட முடியும்.....
- Mathi Vanan மூச்சை வெளியேவிடாமல் மூக்கை இருக்குமாக பொத்தி கொண்டால் உயிர் போய் விடுமே! என்ன செய்வது....
சார்: நான் அதிகபிரசங்கி தனமாகவோ விவாதம் செய்யவேண்டுமோ என்கிற எண்ணம் எனக்கு இல்லை. ...See More - Ragava Lukin Fo Change நீங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்த வேண்டாம் மதி. வெறுமனே கவனியுங்கள். வாசி அடங்கி ஊசி திறக்கும்
- Master Shiva வாசியும் ஊசியும் பேசும் வகையினால் பேசித்திரிந்து பிதற்றிப் பயனில்லை ..........என்கிறார் திருமூலதெய்வம். "வாசி" அடங்க "ஊசி " திறக்கும்........ஊசி திறக்க வாசி அடங்கும்...."கையை" "காலை" ப் பிடித்து காரியத்தை சாதித்துக் கொள்வதுதானே புத்திசாலித்தனம். காலாகிய "வாசியை" பிடிக்காமல் கையாகிய "ஊசியை" திறக்கத் தெரிந்தால் சந்தோசமே...............
- Master Shiva "நாணை" ச் சாப்பிடுவது மட்டுமா விருந்து????????? "நான்" சாப்பிடுவதும் விருந்துதானே DrHariharan Subramanian ....
- Mathi Vanan //"வாசி" அடங்க "ஊசி " திறக்கும்........ஊசி திறக்க வாசி அடங்கும்.//
வாசியும் ஊசியும் அடங்க என்ன பயிற்சி செய்ய வேண்டும்? - புஷ்ப ஜோதி //குழந்தை மூச்சை வெளிவிடவில்லை அதனால்தான் "குழந்தையும் தெய்வமும்" ஒன்று என்கிறோம்.//
பிணத்திற்கு கூட மூச்சு இல்லை... அதனால் தான் அவரை தெய்வமாக வணங்குகிறோமோ? ...See More - புஷ்ப ஜோதி நல்ல விளக்கம், இந்த பிராணன், சுவாசம் மூச்சு, நாடி எல்லாம் அந்த உயிரில் தானே ஒடுங்குகிறது? இது சரியா? தவறாக இருந்தால் திருத்தி கொள்கிறேன்.
- Master Shiva தவறல்ல புஸ்பஜோதி ........நீங்கள் சொல்வதுதான் உண்மை.......உடல் ,உள்ளம் , எல்லாம் உயிரில் ஒடுங்குகிறது என்பது சத்தியம் ....சாஸ்வதம்.....ஆனால் அந்த உயிரை இந்த உடலில் நிலை நிறுத்திக்கொள்ள பிராணன் அவசியம் .....அந்த உயிரை இந்த உடல் பிணமாவதற்கு முன்பே இந்த உடலிலேயே உணர்ந்துகொள்ள நமது யோக குருமார்களால் கூறப்பட்ட"பிராண ஆயமமும்" ஒரு உபாயம்......ஒரு உபாயமே தவிர.....இது மட்டுமே மார்க்கமல்ல...
- புஷ்ப ஜோதி நன்றி மிக்க மகிழ்ச்சி. உயிரை உடலில் நிலை நிறுத்திக்கொள்ள பிராணன் அவசியம் என்று சொல்றீங்க நன்றி ஒத்துகொள்கிறேன்.
அப்போ பிராணனை பெருக்கினால் உயிரை நிலை நிறுத்தி கொள்ள முடியுமல்லவா? ஏன் பிராணனை யாமம் செய்ய வேண்டும்? பிரணா + யாமம் = பிரணாயாமம் . "யாமம்" என்றால் என்ன அண்ணா? - Master Shiva புஸ்பஜோதி ,.....பிராணன்+ ஆயமம் என்பதே சரி ......ஆயமம் என்றால் கட்டுப்படுத்துதல்....அல்லது பாதுகாத்தல் எனப்பொருள்.
- Master Shiva http://yogashiva.blogspot.com/2011/01/blog-post_23.html...
- புஷ்ப ஜோதி பகிர்தலுக்கு நன்றி அண்ணா,
// நடை என்றால் மூச்சோட்டம் எனப்புரிந்திருக்கும். "வளி" என்றால் காற்று. (வளிமண்டலம் என்று கூறுகிறோமே. )....See More - Master Shiva http://yogashiva.blogspot.com/2011/11/blog-post_28.html...
- புஷ்ப ஜோதி இது தான் ஜீசஸ் "அக்னி மூலமாகவும், பரிசுத்த ஆவி மூலமாகவும் ஞானஸ்தானம் கொடுத்தார் என்பதா?
- புஷ்ப ஜோதி அண்ணா! பிராணனை பெருக்க மூச்சு பயிற்சியை தவிர்த்து, வேறு ஏதாவது பயிற்சிகள் இருக்கிறதா?
ஏன் கேட்கிறேன் என்றால், வயதுமிக்கவர்கள் சுவாசிக்கவே சிரமபடுகிறார்கள்... இந்த மூச்சு பயிற்சிகளை செய்து எனக்கு தெரிந்த அன்பர்கள் சில உடல் உபாதைகளை சந்தித்து உள்ளார்கள்.
இரகசியம் என்று சொல்லி நிறுத்தாமல் தெளிவு படுத்துங்கள் . - புஷ்ப ஜோதி பிரணவத்தின் அடி நடு முடி நின்றோங்கும் திருவடிகள் ” – வள்ளலார் வாக்கு
இதன் உட் பொருள் :...See More