Total Pageviews

Sunday, July 21, 2013



யோகயுவகேந்திராவின் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்........

Wednesday, July 10, 2013

பள்ளிக்கூடம்.....




பள்ளிக்கூடம் என்பது மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கிற இடம் என்பது தான் பொதுவான புரிதல். அது சரியும் கூட. ஆனால் இன்று பள்ளிக்கூடங்கள் அதுவும் தனியார் பள்ளிக்கூடங்கள் பணம் பிடுங்கும் பகல் கொள்ளைக்காரர்களின் கூடாரங்களாக இருக்கின்றன என்று தான் பெரும்பாலும் அனுபவப்பட்டவர்களின் கூற்றாக இருக்கின்றன. இன்று இருக்கிற அமைப்பில் பள்ளிக்கூடங்கள் உருவாவதற்கு முன் நம் ஊர்களில் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் மூலம் தான் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இன்றைக்கு கற்பிக்கப்படும் இந்தக் கல்வி முறை மெக்காலே என்ற ஆங்கிலேய அதிகாரியால் உருவாக்கபட்டு அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும். இந்த கல்வி முறையை அமல் படுத்த வேண்டிய அவசியம் குறித்து மெக்காலே அன்றைய ஆங்கிலேய அரசுக்கு அனுப்பிய குறிப்பு ஒன்று இப்படி சொல்கிறது. -1835ல் மெக்காலே பிரபு அனுப்பிய குறிப்பின் கருத்தின் சுருக்கம்!

”இந்தியாவில், நீள அகலத்திலும் குறுக்கு நெடுக்கிலும் நான் பயணித்திருக்கிறேன். ஒரே ஒரு திருடனையோ, ஒரு பிச்சைக்காரரையோ நான் நான் கண்டதில்லை. அப்படியொரு, செல்வத்தை, உயர் அற மதிப்பீடுகளை, செம்மாந்து வாழும் மக்களை இங்கு காண்கிறேன். இந்த நாட்டை, ஒருபோதும் நம்மால் வெற்றிகொள்ள முடியாது. அவ்வாறு வெற்றி கொள்ளத்தான் வேண்டுமெனில், இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கும், அக ஒழுக்கத்தை, பண்பாட்டு மரபுச் செழிப்பை முறிக்க வேண்டும். 

ஆகவே, இந்தியாவின் தொன்மையான கல்வி முறையை, பண்பாட்டுக் கூறுகளை அகற்றிவிட்டு, அவற்றிற்கு பதிலாக நமது முறைகளைக் கொண்டுவர வேண்டும். எவையெல்லாம், அயல்நாட்டிலிருந்து வருகின்றனவோ அவை எல்லாம் தம்முடையவற்றைக் காட்டிலும் மேலானவை என இந்தியர்கள் நம்பும்படிச் செய்ய வேண்டும். தங்கள் மொழிகளைக் காட்டிலும் ஆங்கிலம் உயர்வானது என எண்ணச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் மாறத் துவங்கிய பின்னால், தமது சுய பெருமிதத்தை இழப்பார்கள்; தமது சொந்தப் பண்பாட்டை இழப்பார்கள்; பின்னர் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள். இந்தியா, ஓர் உண்மையான அடிமை நாடாகிவிடும்!” 


இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சிக்குத் தேவையான அடிமை குமாஸ்தாக்களை உருவாக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்ட மெக்காலே கல்வி முறை தான் இன்று நமது பள்ளிக்கூடங்களில் பின்பற்றப் பட்டு வருகிறது. இன்று நாம் காண்கின்ற இந்தப் பள்ளிக்கூடம் என்பதற்கும் நமது மரபில் செயல்பட்டு வந்த திண்ணைப் பள்ளிக்கூடம் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்தத் திண்ணை பள்ளிக்கூடத்திற்குஅமாவாசை அன்றும் பௌர்ணமி அன்றும் விடுமுறை விடப்படும். அவற்றுக்கு முன் பின் நாள்களும் விடுமுறை நாள்களே. முதல் நாள் உச்சிப்பள்ளி என்று பெயர். உச்சியில் சூரியன் வருகிற நேரம் வரை மட்டும் பள்ளிக்கூடம் இருக்கும் அதனால் அது உச்சிப்பள்ளி என்றானது. அன்று மாணவர்கள் பள்ளிக்கூடத்தை மொழுகிப் பெருக்கி சுத்தம் செய்வர். அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்கு வந்துள்ள காய்கறிகளையும் அரிசியையும் ஆசிரியருக்குக் காணிக்கையாக்க் கொண்டு வந்துக் கொடுப்பார்கள். பலர் அவற்றுடன் காசும் கொண்டுவந்து தருவார்கள். 

இந்தக் கொடை பொருட்கள் தான் ஆசிரியருடையை குடும்ப வாழ்க்கைக்கு பெரும் துணையாக இருக்கும். இன்று போல பகல் கொள்ளை அன்றைய பள்ளிகளில் இல்லை. சனி எண்ணெய் என்று ஒன்று உண்டு. சனிக்கிழமை தோறும் எல்லா மாணவர்களும் அவரவர் வீட்டிலிருந்து சிறிதளவு நல்லெண்ணெய்யை கொண்டு வந்து ஆசிரியருக்கு கொடுக்கும் வழக்கம் இருந்த்து. இதுவே சனி எண்ணெய் என்பதாகும். திண்ணைப் பள்ளிக்கூடங்கள் பைய பைய மறைய கொஞ்சம் கொஞ்சமாக பெருகியது இன்றைய கொள்ளைப் பள்ளிக்கூடங்கள்.





நன்றி;வெள் உவன்