Total Pageviews

Friday, January 14, 2011

நினைவு நல்லது வேண்டும்

வானொலி நேர்காணலின் போது ஒரு அன்பர் கேட்ட கேள்வி "'நான் நினைப்பதை எந்த உபகரணமும் இல்லாமல் , யோகத்தின் மூலமாகச் செயல் படுத்த முடியுமா ?.............................



"நினைப்பதைச் செயல்படுத்த முடிகிறதோ இல்லையோ
நினைப்பை ஒழுங்கு படுத்த முடியும்.  இது யோகத்தால் சாத்தியம்" 





வரப் போகிறது அடுத்த கட்டத் தொழில் நுட்பம்! இதைப் பற்றிப் பார்க்கும் முன் ஒரு நிகழ்வைப் பற்றி பார்ப்போம்!

சமீபத்தில் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஓர் அலுவலகத்திற்குச் சென்று இருந்தார் ஒரு பத்திரிக்கையாளர். வாசலில் அவர் தலையில் ஒரு ஹெட் போன் ஒன்றை மாட்டி அனுப்பினார் காவலாளி.


கதவைத் திறக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே சென்றவருக்குக் கதவு அதுவாகவேத் திறந்து வழி விட்டது. கொஞ்சம் பயத்தோடு உள்ளே சென்றவருக்கு லேசாக வியர்த்துக் கொட்ட, FAN சுவிட்ச் எங்கேவென்று தேடத் தொடங்கினார். அவர் நினைத்த மறு கணமே FAN ஓட துவங்கியது!என்னடா இது? ..எல்லாம் நினைத்த மாத்திரத்திலே நடக்கிறது என திகைத்துப்போன அவருக்கு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஏரியல் கார்ட்டன்(ARIEAL CARTAN) என்கிற உளவியல் நிபுணர் ,"ஆமாம் ....இது சாத்தியம் என்று பேச தொடங்கினார்.



இது போன்ற சின்ன சின்ன வேலைகளை இருந்த இடத்தில இருந்தே அதுவும் மனதில் நினைத்தாலே போதும் ...அது நடக்கும்" என்று சொல்லும் போது நமக்கும் ஒரு சின்ன ஆச்சர்யம் மற்றும் ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்ளத்  தான் செய்யும்.

அந்த டெக்னாலஜி பற்றிப் பார்ப்போம் ..."எதையாவது செய்யும் முனைப்போடு நீங்கள் சிந்திக்கும் போது பீட்டா (beta waves ) அலைகளை உங்கள் நினைவகம் உருவாக்குகிறது, ஓய்வு மூடுக்கு வரும் போது ஆல்பா அலைகளை (ALFA WAVES ) உருவாக்குகிறது.இந்த அலைகளை கட்டுப்படுத்துவதின் மூலமாக சுவிட்ச் இல்லாமலே லைட் போடலாம் ...இசை கேட்கலாம். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்!






நம் காதில் இருக்கும் ஹெட் செட்டில் இருக்கும் சில ஏலேக்ட்ரோடுகள் நம் எண்ண அலைகளைப் படிக்கின்றன.அந்த வாசிப்புகள் கணினிக்கு அனுப்பி அதை ப்ரோசெச்ஸ் செய்து சுவிட்ச்களுக்கு கட்டளைகளை அனுப்புகின்றன.இதன் மூலம் நம் எண்ணங்கள் செயல்படுத்துகின்றன ..


ஆனால், இது இப்போது தொடக்க நிலையில் உள்ள ஆராய்ச்சி! இப்போதைக்கு இது போன்ற விஷயங்கள் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த கட்ட நிலைகள் மிக விரைவில் வரும் என்று ஆய்வாளர் கூறியுள்ளார் .


...மனித மூளையை ஒரு கணினியால் படிக்க முடியும் என்பதே மிகப் பெரிய விஷயம். ஆனால் இதனால் ஏற்படும் பாதகமான அம்சங்கள் பற்றி இங்கே சொல்ல வேண்டாம் ஒவ்வொருவரும்
நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.


நினைப்பது எல்லாவற்றையும் கணினி செய்து விடுகிறது . சரி ! ...... நல்லதை நினைக்க வேண்டுமே! கற்பக மரத்தடியில் இருந்தவனுக்கு அவன் கேட்ட கனிகளும், ஒய்வெடுக்கக் கட்டிலும் , பணியாட்களும் கிடைத்தார்கள். ஆனா சிங்கம் வந்தா என்ன செய்யன்னு நினச்சுட்டானாம். பாவிப்பய.


""நினைப்பதைச் செயல்படுத்த முடிகிறதோ இல்லையோ
நினைப்பை ஒழுங்கு படுத்த முடியும்.  இது யோகத்தால் சாத்தியம்" 


"நினைவு நல்லது வேண்டும்"


"சித்த விருத்தி நிரோதக இதி யோகஹ"
(எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதே யோகம் ).


                                                                          ஓம் தத் சத்

No comments:

Post a Comment