அக பக்தி
தினமும் குளிப்பதனால்தான்
ஹரியை அடைய முடியுமெனில்
நீரில் வாழும் விலங்குகள்
ஹரியை அடைந்துவிட்டனவா?
பழங்களையும், கிழங்குகளையும் உண்டால்தான்
ஹரியை அடைய முடியுமெனில்
வெளவால்களும், குரங்குகளும்,
ஹரியை அடைந்து விட்டனவா?
துளசிச் செடியை வணங்குவதால் தான்
ஹரியை அடைய முடியுமெனில்
நான் துளசித் தோட்டத்தையே வணங்குவேனே!
கல்லை வணங்குவதால் தான்
ஹரியை அடைய முடியுமெனில்
நான் மலையையே வணங்குவேனே!
இலைகளையும் தழையையும் தின்றால்தான்
ஹரியை அடைய முடியுமெனில் ஆடுகள்
ஹரியை அடைந்து விட்டனவா?
பாலை மட்டும் அருந்தினால் தான்
ஹரியை அடைய முடியுமெனில்
கன்றுகள் ஹரியை அடைந்துவிட்டனவா?
புறச் சாதனங்களால் அல்ல
உண்மையான அன்பினாலேயே
நந்தகோபனை அடைய இயலும்.
அன்னை மீராபாய்
No comments:
Post a Comment