நீண்ட நாள் கழித்து
புத்தகத்தை புரட்டும்போது
தன்னை நினைவூட்டியது
மயிலிறகு
எதனாலோ
பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம்
அழகாயிருக்கிறதென்றோ....
சில நினைவுகளுக்காகவோ ....
அல்லது
குட்டி போடும் என்றோ ..
இப்போது
இறகு தொலைத்த அப்பறவையுமில்லை
"நானுமில்லை"
"கறந்த பால் மடி புகா"
"கடைந்த வெண்ணை மோர் புகா"
No comments:
Post a Comment