Total Pageviews

Saturday, January 15, 2011

இதுவும் கடந்து போகுமா............

" நான்" எனும் பாதரசம் பூசிய

மாயக் கண்ணாடி என் மனம்.....


முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்
உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்?


மாயக் கண்ணாடி
அந்தப் பாதரசம் இழக்கத் தயாராயில்லை
உலகம் காட்டவும் தயாராயில்லை

தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........

தப்பியோட முடியாத பிம்பங்கள்
விட்டு விலகாத "நான்" பிம்பங்கள்
சுகமாய்த்தான் இருந்தது
அந்த" அன்பு மழையில்"
நனையும் வரை


அந்த அன்பெனும் அடைமழையில்
நனைந்தது மாயக் கண்ணாடி


 மழை நின்றாலும் பரவாயில்லை
காணாமல் போய்விட்டது. 
உதிர்ந்து கரைந்தது பாதரசம்
"நான்" இழந்தது மாயக் கண்ணாடி.

No comments:

Post a Comment