ஒருமுறை திருவண்ணமலையில் சாமியை பார்க்க போயிருந்தேன் . சாமி என் கையில் ஒரு புத்தகத்தை கொடுத்தார் .
"என்ன இது"
"பகவத் கீதை"
"இதைப்பற்றி உனக்கு என்ன தெரியும்"
"கீதை பிராணனைப் பற்றிய பாடம்னு எனக்கு தோணுது, ஆனால் சிலர் இதை கர்மம்னும் , சிலர் ஞானம்னும் , சொல்றாங்க"
"நீ என்ன நினைக்கிற"
"............................."
"கீதையின் முதல் சுலோகம் என்ன?"
"தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே"
"கடைசி சுலோகம்"
"த்ருவா நீதிர் மதிர் மம"
"கடைசி சுலோகத்தின் கடைசி வார்த்தையையும் , முதல் சுலோகத்தின் முதல் வார்த்தையையும் இணைக்கும்போது கிடைப்பது "மம தர்ம" இதன் பொருள் "உனது உண்மையான தர்மம்".இதைத்தான் கீதை போதிக்கிறது "
"புரியல சாமீ'
"உன் தர்மம் என்ன?. நீ மனித வாழ்கை வாழவேண்டும் .... நீ மனிதப்பிறவிதான்: மகானுமல்ல, மிருகமும் அல்ல என்பதை அடிக்கடி ஞாபகப் படுத்திக்கொள்".
அதன் பிறகு யோசிக்க ஆரம்பித்தேன் . உலகில் சொல்லப்படுகிற மதங்கள் யாவும் இறுதியில் ஒரு புள்ளியில் தான் சங்கமமாகின்றன . அது "மனிதன்
மனிதனாக வாழவேண்டும்' என்ற புள்ளிதான். இன்றைய மனிதன், தான் ஒரு மனிதன் என்பதனை முதலில் உணர வேண்டியதிருக்கிறது .
ஒருமுறை தம்பி திரவியத்தின் கணணி மையத்தில் ஒரு வாசகம் பார்த்தேன் . அதை நினைவு கொண்டு இந்த கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன்
"என்ன இது"
"பகவத் கீதை"
"இதைப்பற்றி உனக்கு என்ன தெரியும்"
"கீதை பிராணனைப் பற்றிய பாடம்னு எனக்கு தோணுது, ஆனால் சிலர் இதை கர்மம்னும் , சிலர் ஞானம்னும் , சொல்றாங்க"
"நீ என்ன நினைக்கிற"
"............................."
"கீதையின் முதல் சுலோகம் என்ன?"
"தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே"
"கடைசி சுலோகம்"
"த்ருவா நீதிர் மதிர் மம"
"கடைசி சுலோகத்தின் கடைசி வார்த்தையையும் , முதல் சுலோகத்தின் முதல் வார்த்தையையும் இணைக்கும்போது கிடைப்பது "மம தர்ம" இதன் பொருள் "உனது உண்மையான தர்மம்".இதைத்தான் கீதை போதிக்கிறது "
"புரியல சாமீ'
"உன் தர்மம் என்ன?. நீ மனித வாழ்கை வாழவேண்டும் .... நீ மனிதப்பிறவிதான்: மகானுமல்ல, மிருகமும் அல்ல என்பதை அடிக்கடி ஞாபகப் படுத்திக்கொள்".
அதன் பிறகு யோசிக்க ஆரம்பித்தேன் . உலகில் சொல்லப்படுகிற மதங்கள் யாவும் இறுதியில் ஒரு புள்ளியில் தான் சங்கமமாகின்றன . அது "மனிதன்
மனிதனாக வாழவேண்டும்' என்ற புள்ளிதான். இன்றைய மனிதன், தான் ஒரு மனிதன் என்பதனை முதலில் உணர வேண்டியதிருக்கிறது .
ஒருமுறை தம்பி திரவியத்தின் கணணி மையத்தில் ஒரு வாசகம் பார்த்தேன் . அதை நினைவு கொண்டு இந்த கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன்
."மதம் சிறை - மனிதம் இறை"
ஓம் சத் தத்
1 comment:
மனிதன் மனிதனாய் வாழ்ந்தால் உலகில் என்றும் ஆனந்தமே.
Post a Comment