Total Pageviews

Monday, March 26, 2012

எச்சரிக்கை......



என்ன 
செய்தால்
உங்களுக்கு கோபம் வரும் "
‘ஏன்’ 
‘சரி...சரி... என்ன சொன்னால்
கோபப் படுவீர்கள்"
‘எதற்கு கோபப் படவேண்டும்’ 
‘அப்போ உங்களுக்கு கோபமே
வராதா’ 
‘நான் சொன்னேனா’ 
‘அப்போ
கோபப் படுவீர்களா’
‘படலாம்’ 
‘கோபப் அப்டுவீங்களா?!!!
கோபப் படுவீங்களா நீங்க!!!?’ ஆச்சர்யத்தில்
புருவம் உயர்த்திக் கொண்டார்
சிரித்துக் கொண்டேன்
‘சாதுங்க நீங்க’ 
அவரையேப் பார்த்தேன்
‘ஆழமான பார்வை உங்களுக்கு’ 
‘அப்படியா?’
‘ஆமாங்க’
‘உண்மையாகவா?’
‘அட சத்தியமாங்க’
‘ஏன் நீங்க அப்படி
பார்க்க மாட்டீர்களா?’
‘பார்ப்பேனே.. பார்ப்பேனே.. இதோ..’ அவர்
கண்களை உருட்டிக் காட்டுகிறார்.
‘அசிங்கமா இருக்கே’ என்றேன்
‘ஏன்..???????????????!!!!!!!’
‘ஆமாங்க நல்லாவே இல்ல’ 
‘ஏன்..???????????????!!!!!!!’
‘குருடு மாதிரி இருக்கு?’
‘குருடா….!!! யாரு?’
‘நீங்க தான்
ஆந்தை மாதிரி முழிக்கிறீங்க’ 
சற்று நக்கலாகச்
சிரித்துக் கொண்டேன்
‘நானா???!!! நானா???!! ஆந்தையா??
என்னை பார்த்தா ஆந்தை மாதிரி தெரியுதா???
நீ மட்டுமென்ன யோக்கியமா – உனக்கும் தான்
நொள்ள கண்ணு’ என்றார் வெடுக்கென்று
‘இப்பதான் சாது’ன்னீங்க
‘ஐயோ; ஐயோ; நீயா சாது!!?
மொடாகண்டன் நீ’
‘ஆழமான பார்வைன்னு கூட
சொன்னீங்களே’
‘அப்போ சொன்னேன்
இப்போ இல்லை, நீ அப்படியில்லை’ என்றார் கோபம்
தலைக்கேறியவராக
‘ஒரே நிமிடத்தில் மாறிவிட்டேனா’ என்றேன்
‘நீ எப்பவுமே
இப்படித் தான் போல
நான் தான் தவறாகப் புரிந்துக் கொண்டேன்’ என்றார்
‘சரி, இப்போவாவது
புரிந்துக் கொண்டீர்களா’ 
‘புரிது புரிது; நீ போ’ என்று
சலித்துக் கொண்டார்
நான் மௌனமாக அங்கிருந்து
நடக்கலானேன்
அவர் என்னை
பைத்தியம் என்று
பக்கத்தில் இருந்தவரிடம்
கோபமாக பேசிக் (பற்ற வைத்துக்) கொண்டிருக்கிறார்.
நான்
திரும்பிக் கூட
பார்க்கவில்லை அவரை
அவரின் சப்தம்
என் காதில் வெகு வேகமாக
குறைந்துக் கொள்ளுமாறு
மிக வேகமாக நடக்கிறேன்......
உலகத்தின் நடத்தை........
மனிதரின் மனசு.........
நாம் தலையாட்டும் வரை தான்;
ஒரு கண்ணைப் பற்றிப் பெருமை பேசினால்
இரு கண்ணையும் பாதுகாக்க
தயாராக இருங்கள் என்பது மட்டுமே என்
உலகத்திற்கான எச்சரிக்கை!

No comments:

Post a Comment