எண்ணமென்னும் கடலுக்குள் தத்தளிக்கிறேன் ,
இறைவா தத்தளிக்கிறேன்,கரை சேர முயற்சிக்கும் ஒவ்வொரு
முறையும் முழ்கடிக்கப்படுகிறேன் இன்னும்
ஆழமாக முழ்கடிக்கப்படுகிறேன்.
எனக்குள் நானே திமிறிக்கொண்டும்
தினறிக்கொண்டும் முயற்சிக்கிறேன்,
இறைவா முயற்சிக்கிறேன்.
என் நிலை பார்த்து நகைக்கும் உன்னை
வேண்டுகிறேன்,இறைவா வேண்டுகிறேன்.
என்னை மீட்டு எந்தன் ஆன்மம் உணர
அருளும்படி வணங்குகிறேன்,
இறைவா வணங்குகிறேன்.
உங்களது வலைப் பூக்கள் இருபது வருடங்களுக்கு முன் எனக்கிருந்த
கவிதை ஆர்வத்தை மீண்டும் தூண்டி விட்டது .நான் உண்ணும் உறங்கும்
நேரம் தவிர என் கரங்களில் வலைப் பூக்கள் மட்டுமே.......... படிக்கப்,படிக்க கண்களில் கண்ணீர் கசிய ஆனந்தமடைகிறேன் ! சிறு வயது முதலே என்னக்கிருந்த ஆன்மீகத் தேடலையும் சித்தர்களைப் பற்றி அறியும் ஆர்வத்தையும் ஓரளவுப் பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் ,
புத்தருக்கு போதிமரத்தடியில் கிடைத்தது போல்,ரமணருக்கு கிடைத்தது போல், அருணகிரிநாதருக்கு கிடைத்தது போல், எல்லோருக்கும் ஓர் இரவில் கிடைத்து விடுவதில்லை ஞானம். தீவிரப் பயிற்சியினாலேயே அது சாத்தியமாகிறது .டேஹ்ராபே,பால்ப்ரிண்டனுக்கு விளக்கியது போல் நீங்கள் உணர்ந்ததை, உங்களுக்கு தெரிந்ததை ,அறிந்ததை, எங்களுக்கு பகிர்ந்தளிக்கும் உங்களது ஞானம் மேன்மையானது, உயர்வானது, போற்றதக்கது.என்னைப் போன்ற ஞான ஸூன்யங்களை உங்களது எழுத்துக்கள் சிறிதேனும் தட்டி எழுப்பும் என்பதில் ஐயமில்லை.
நீங்கள் இது போன்று மேலும் பல நூல்களை வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .
வலைத் தொடர்பு இல்லாதவர்களுக்கு உங்களது எழுத்துக்கள் சென்று பயனடையும் படி செய்த திரு.வேல் விஜயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் .
மாஸ்டர் ..........ஒரே ஒரு வேண்டுகோள் இதை கேட்பதற்கு எனக்கு சிறிதும் தகுதி இல்லைதான் ,மனிதனின் பேராசைக்கு அளவு இல்லையே ,எங்களை எப்படியும் த்யானம் வரை அழைத்துச்செல்லுங்கள் மாஸ்டர்.
அன்புடன்,
வீணா,
யோகயுவகேந்திரா
1 comment:
True master help us, teach us - how to cross this samsar kadal........
Post a Comment