குளத்தில் எறிந்த
ஓட்டுச்சில்லுகள்..
தத்தி
தத்தி... தத்தி....
சலனங்கள்........
மனக்குளத்திலும்......
இரவுப் போர்வை
உதறி நடக்கும்
ஒற்றையடிப்பாதையில்
மேகம் விலக்கிப்பார்த்து.....
.
எனக்குமுன் ஊர்ந்துபோன
அரவத்துக்கு..
வழிசொல்லிப் போனது
நிலா.
வாசம் நுகர்ந்த
தெருநாய்கள்
வீடுவரை வழித்துணையாய்..
மூடிய இமைத்திரைக்குள்
மெல்ல உருக்கொண்டன
துரோகச் சித்திரங்கள்.........
No comments:
Post a Comment