Total Pageviews

Saturday, March 3, 2012

துரோகச் சித்திரம்...


குளத்தில் எறிந்த 
ஓட்டுச்சில்லுகள்..

தத்தி
தத்தி... தத்தி....
சலனங்கள்........

மனக்குளத்திலும்......

இரவுப் போர்வை

உதறி நடக்கும்
ஒற்றையடிப்பாதையில்
மேகம் விலக்கிப்பார்த்து.....
.



எனக்குமுன் ஊர்ந்துபோன 
அரவத்துக்கு..
வழிசொல்லிப் போனது
நிலா. 

வாசம் நுகர்ந்த 
தெருநாய்கள்

வீடுவரை வழித்துணையாய்..

மூடிய இமைத்திரைக்குள்
மெல்ல உருக்கொண்டன
துரோகச் சித்திரங்கள்.........

No comments:

Post a Comment