எத்தனையாவது
மனிதனுக்கான
சவப்பெட்டியிது?
எத்தனையாவது
மரத்திலிருந்து
செய்யப்பட்ட
சவப்பெட்டியிது?
எத்தனையாவது மனிதன்
உருவாக்கும்
சவப்பெட்டியிது?
தெரியாது.
பிறப்பின் காரணம்
ஏதுமில்லையெனில்
இறப்பின் காரணமும்
கேள்விக்குறிக்குள்
பிறக்கையில்
உன்னருகில்
நீ
யாரெனத்
தெரியாத
நான்கு பேர்.
போகும்போது
நீ
யாரெனத்
தெரிந்த
நான்கு பேர்.
யார் யாரோடோ
பழகி
யார் யாரோடோ
விலகி
யார் யாரோடோ
வாழ்ந்து
யாருமேயற்ற
ஒருநாளில் பிரிந்து
எல்லோரின்
நினவிலிருந்தும்
மக்கிப் போகும்
பேரவஸ்தைக்கு
யாரோ வைத்த பெயர்
"வாழ்க்கை"
3 comments:
ean,eppadi,edarkaaga vandhom ingu vandhu pohira seyalhal anaithum vaalkai endra poorvaikul adangum endral adanai poorthikolvadha?..............alladhu?????????
by,MANJU
vaalkai ennum kadum padhayai kaddaka vali enna?..........sir.
i agree life is a bit confusing.
Post a Comment