கண்கள் மூடி
கவிழ்ந்து படுத்து
உறக்கமற்று
நீள்கிற இரவு.
கண்கள் விரித்து
காண்கிற காட்சி
என் உருவிலேயே
நிறைகிற நினைவு.
செய்கிற வேளையில்
சிந்தையின்றி
என்னைச் சுற்றியே
விரிகிற எண்ணம்.
உடல் உறங்கி
உள்ளம் உறங்கா
காலத்தின் நீட்சி.
விடிய விடிய
என் பெயரை
நான்
மட்டுமே
உச்சரிக்கும்
விந்தை.
இவையெல்லாம்
என்னிடத்தில்
சொல்கிறது
நான்
எனது மையம் நோக்கி
எனது மையம் நோக்கி
செல்கிறேனென்று!.
மருத்துவரோ எளிதாய்
சொல்லிவிட்டார்
நீ சைக்கோ
ஆகி விட்டாயென்று!
வாழ்க! மருத்துவம்!
1 comment:
Vanakkam Sir
How would you differentiate between normal and abnormal behaviour? I remember you saying that there is no such thing as good or bad.
Then how did The Gurus able to treat psychiatric patients?
Shankar Ganesh
Post a Comment