ததீசி முனிவர், பேராசையோ பொறாமையோ துளியும் இல்லாதவர். பாற்கடலைக் கடையும் பணி நடந்தபோது அவ்வளவு தேவர்களும், அஷ்டதிக் பாலர்களும், சகல தேவதைகளும் தாங்களது விசேஷமான சக்திகள் அடங்கிய ஆயுதங்களை ததீசி முனிவரிடம் தான் ஒப்படைத்தனர்.
ததீசி முனிவர் மிகசிறந்த ஆசாரசீலர். தன்னை நம்பி , பிறகு வந்து பெற்றுக் கொள்வதாகக் கூறி ஒப்படைத்த ஆயுதங்களைக் கண்போல் காக்க விரும்பினார் ஆனால் பாற்கடல் கடையப்பட்டு அமுதமும் கிடைத்து விட்ட நிலையில் தேவர்களுக்கு இனி அந்த ஆயுதங்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றிவிட்டது.
ததீசிமுனிவரிடம் வந்து ஆயுதங்களைத்திரும்பக் கேட்கவே இல்லை. வெகு நாள்வரை பாதுகாத்து வைத்து இருந்த முனிவர் யாரும் வந்து கேட்காத நிலையில், அவற்றைத் தூக்கி எறிய மனமில்லாமல், அவ்வளவு ஆயுதங்களையும் பொடியாக்கி, அதை ஒரு உருண்டையாகச் சுருக்கி விழுங்கி, அந்த சக்திகள் அனைத்தும் தனதுமுதுகெலும்பில் உருக்கொள்ளுமாறு செய்து கொண்டார்.
இதனால் தான் அவரது முதுகெலும்பு உலகில் அவ்வளவு ஆயுதங்களாலும் ஏதும் செய்ய இயலாத ஒரு சிறப்பு கொண்டதாக மாறி இருந்தது.
அனைத்து ஆயுதங்களும் உருத்திரண்ட ததீசி முனிவரின் முதுகெலும்பால் ஒரு ஆயுதம் செய்தால், அந்த ஆயுதமே விருத்திகாசுரனை அழிக்கும் என்று விஷ்ணுமூர்த்தி இந்திரனுக்குக் கூறினார்.
தேவலோக சிற்பி விஸ்வகர்மா ததிசி முனிவர் உயிர் தியாகத்திற்கு பிறகு அவரது முதுகெலும்பிலிருந்து சக்தி வாய்ந்த வஜ்ராயுதத்தை வடிவமைத்து இந்திரனுக்குக் கொடுத்தார்.
சரி நண்பர்களே!
இந்தக் கதையிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
2 comments:
Sir,
I can understand that the spinal cord is the third breath. Why should it be named as vajrayudhum (vajram is diamond)?
Shankar
வாசி இருக்க வினையது(விருத்தி) தீரும்.
Post a Comment