Total Pageviews

Friday, May 6, 2011

அட்சயதிருதியை




ஒரு விறகுவெட்டி, மிகுந்த பக்திமான்,. ;காட்டிற்கு விறகு வெட்டச்செல்லும்போது ஒரு நொண்டி நரியைப் பார்க்கிறான். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் ஈசன் படியளப்பானாமே!, இந்த நொண்டி நரிக்கு எப்படி சாப்பாடுபோடுகிறான் எனப்பார்போம் .' என பக்கத்திலிருந்த மரத்தில் அமர்ந்துவிடுகிறான் .


சற்று நேரத்தில் வந்த புலி, சாப்பிட்ட மீதி இறைச்சியை நரி அருகில் விட்டுச்செல்கிறது. ;நரிக்கு உணவிட்ட ஈசன் தனக்கும் உணவிடுவானென வேலை செய்யாமல் இருக்கிறான் விறகுவெட்டி.. ;இரண்டு நாள் கழிந்து விட்டது. ; உணவு கிடைக்கவில்லை. இறை நம்பிக்கை குறைந்த நேரத்தில்


அங்கு வந்த ஞாநி சொன்ன பதில் என்ன தெரியுமா?

தம்பி நீ கற்றுக்கொண்ட பாடம் தவறு. நீ நரியிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டதற்குப் பதிலாக புலியிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கவேண்டும். இனியாவது முடியாதவர்களுக்கு உதவி செய் '



சரி இந்தக் கதைக்கும் அட்சயத்திதிக்கும் என்ன சம்பந்தம்.



ஆதி சங்கரர் பிச்சைக்கு வந்திருக்கிறார்.ஆனால் பிச்சையிட ஒன்றுமில்லை. அந்த வீட்டுத்தலைவி ரொம்பத் தவிக்கிறாள். தனது வறுமையை எண்ணி நொந்து கொள்கிறாள்.பரபரப்புடன் எதாவது கிடைக்குமா?........ தேடுகிறாள்.


கிடைத்தது ஒரு நெல்லிக்கனி, அவசரமாக கொண்டுவந்து அதீதிக்கு தானமிடுகிறாள்


சங்கரருக்கு அந்த அம்மையாரின் அவலம் புரிகிறது. மனஒருமையுடன்,கனகதார தோத்திரம் படிக்கிறார் .விளைவு பொன்மழை பொழிகிறது. அன்றைய தினம் அட்சயதிதி.


அட்சயதிதி என்பது , வாங்குவதற்கு உகந்த நாள் அல்ல நண்பர்களே!


கொடுப்பதற்கு உகந்த நாள். ;அட்சயதிதி அன்று, சாதுக்களுக்கு தானம் செய்தால் ஞானச் செல்வம் கிடைக்கும். குருவிடமிருந்து ஞானத்தைப்பெற்றுக்கொள்வதற்கு அட்சயத்திதி சிறந்தது.


பரசுராமன் பிறந்ததும், தனது மாணவர்களுக்கு யோக பாடங்களை ஆரம்பிப்பதும் அட்சய திதியில்தான்.குசேலன் கண்ணனுக்கு அவல் கொடுத்து செல்வச் சிறப்புகளைப் பெற்றதும் இந்த நாளில்தான். இந்த நாளில் தானம் கேட்டால் இல்லை என சொல்லாது தருவான் என்பதால் கர்ணனிடம் கண்ணன் கவசக் குண்டலங்களைத் தானமாகக் கேட்டதும் இந்த அட்சயத்திதி நன்னாளில்தான்.


சயம் என்றால் குறை எனப்பொருள். அட்சயம் என்றால் குறைவில்லாத எனப்பொருள். அட்சயதிதி அன்று செய்யக்கூடிய தானங்களால் அள்ள அள்ளக்குறையாத அருட்செல்வத்தைப் பெறலாம்.கொஞ்சமாகத் தானம் செய்தாலும்,மேரு மலையைப் போல் புண்ணியம் சேரும் என்கிறார்கள் இத்தினத்தின் சிறப்பை உணர்ந்த யோகிகள்.


சித்திரைமாதம் அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில்வரும் இந்த அட்சயதிதி, மனமுவந்து நாம் செய்யும் தானதர்மங்களை மேலும்மேலும் வளர்க்கிறது.அரிசிபருப்பு பானகம் நீர்மோர் விசிறி செருப்பு பால் என இயன்றவைகளைவாங்கி சாதுக்களுக்கும், ஏழைகளுக்கும் அளிக்கலாம்.

அனைத்திலும் மிக உயர்ந்தபுண்ணியம், சாதுக்களுக்கு வயிறார உணவிடுவதுதான்!

No comments:

Post a Comment