Total Pageviews

Friday, February 18, 2011

பாரதப் பாரம்பரியம்


நமது பாரம்பரியம்


இந்திய நாகரிகம்:


 நாகரிகங்களுக்கு எல்லாம் முன்னோடி நமது மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகமே. இந்த நகரங்களில் கிட்டத்தட்ட 40,000 மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 8000 வருடங்களுக்கு முன்பே நாகரிகத்தில் சிறந்திருக்கிறார்கள். ரோம் நகரத்தின் செழுமையும், வசதிகளும் மொகஞ்சதாரோவிலும் இருந்தது என்று ஆச்சரியப்படுகிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.



வெள்ளத்தைத் தடுக்கும் கட்டிட அமைப்பு, கழிவுநீர்க் கால்வாய்கள், உயரமான தடுப்புச் சுவர்கள் இவை இந்தியக் கட்டிட நுணுக்கங்களுக்கு உதாரணம். பெண் சிலைகள் நிறைய இருந்திருக்கிறது. பெண் தெய்வங்களை வழிபட்டிருக்கலாம். பெண்களுக்கு மதிப்புக் கொடுத்த முதல் நாகரீகம் நம்முடையதே. அரபிக் கடல் முதல் இமயமலை வரை சிந்துசமவெளி நாகரிகத்தின் தாக்கம் இருந்திருக்கிறது.

இந்திய நூல்:


ரிக்வேதம் பழமையான நூலாகக் கருதப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. ரிக்வேதம்.







இந்தியக் கவிதை:

உலகின் முதல் கவிதையாக ராமாயணம் கருதப்படுகிறது. அதேபோல் உலகின் மிகப் பெரிய கவிதையாகக் கருதப்படுவது மகாபாரதம்!


இந்தியப் பல்கலைக்கழகம்

500 - 1300 AD நாலந்தா பல்கலைக்கழகம். ஒரு மைல் நீளம், அரை மைல் அகலம். கற்களால் ஆன இருக்கைகள். 300 வகுப்பறைகள். வான ஆராய்ச்சிக்கூடம், நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை. கடுமையான தேர்வு விதிகள். அப்படியும் 10,000 மாணவர்களும், 200 ஆசிரியர்களும் இருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார் ஹியன் சாங் என்னும் சீனப் பயணி.


இந்தியக் கணிதம்:       


                                         1 முதல் 9 வரையிலான எண் அமைப்பு அரபுமுறையல்ல; இந்தியர்களின் கண்டுபிடிப்பு. இதை ஆமோதிக்கும் அரபுக் கணித மேதைகளும் உண்டு! பூஜ்யத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது நாம்தான். தசம எண் அமைப்பிலும் நாம் முன்னோடிகள். Billion, Trillion, Tera இவற்றைவிட அதிக ஸ்தானங்களை அப்போதே கணக்கிட்டுப் பெயரிட்டவர்கள் நாம். கிரேக்கர்களும், ரோமானியர்களும் பயன்படுத்திய அதிகபட்சம் 106. இந்தியர்கள் 1053. இதெல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு 5000 வருடங்களுக்கு முன்!



இன்று கணினியில் பயன்படும் Binary (0,1) பிங்கள அரசில் (450 BC) பாடல்களின் நீளத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்டது! அதற்குப்பிறகு அதிகம் பயன்படுத்தப்படாமல் மீண்டும் 1678 ல் கண்டுபிடிக்கப்பட்டு முன்னேற்றங்கள் நிகழ்ந்தன.Geometry, Algebra,Calculus Trigonometry இவையும் நாம் உலகிற்கு வழங்கியவை!


இந்திய அறிவியல்:
              
ஐசக் நியூட்டன் புவியீர்ப்புவிசையைக் கண்டறிவதற்கு முன்பே கண்டறிந்த நாடு இந்தியா. சுமார் 1,200 வருடங்களுக்கு முன்னால்! கண்டறிந்தவர் பாஸ்கராச்சார்யா! நியூட்டனால் “மீண்டும்” கண்டறியப்பட்டது கி.பி. 1687 ல்!



4,000 வருடங்களுக்கு முன்பே வான ஆராய்ச்சியில் நாம் சிறந்தவர்கள். நம்ப முடிகிறதா? நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை! மிகச் சிறந்த கணித மற்றும் வானசாஸ்திர நிபுணர் ஆர்யபட்டா சொன்னது (அதாவது கோபர்நிகஸ் தனது கண்டுபிடிப்புகளைச் சொன்ன வருடத்திலிருந்து (1543)ஆயிரம் வருடங்களுக்கு முன்!) : ”பூமி வட்ட வடிவம். சூரியனைச் சுற்றிவருகிறது. படகில் செல்லும்போது கரையிலுள்ள மரங்கள் நகர்வதுபோல் நமக்குத் தோன்றுகிறதல்லவா?, அதுபோல பூமியிலுள்ள நமக்கு சூரியன் நகர்வதுபோல் தோன்றுகிறது”.



 இந்திய மருத்துவம்: 

மேற்குலகம் உலகின் முதல் மருத்துவராக ஹிப்போக்கிரட்டஸைக் (460 - 377 BC) குறிப்பிடுகிறது. ஆனால் இவருக்கு முன்பே மகரிஷி சரகர் (500 BC) எழுதிய சரக சம்ஹிதா எனும் மருத்துவக் கையேடு புகழ்பெற்றது. இந்த நூலில் பல்வேறு வியாதிகளுக்கான தீர்வுகள் காணப்பட்டது. மருத்துவ முறைகள், முதலுதவிகள் குறித்த தெளிவான கையேடு இது .   இந்த நூல் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மருத்துவர் சரகா ரோம, அரபு நாடுகளில் மிகவும் மதிக்கப்பட்டார்.


அடுத்தது ஆச்சரியத்துக்கெல்லாம் ஆச்சரியம்! கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கு முன்பே சுஷ்ருதர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்! சிதைந்த மூக்கு, உதடு,காதுகள் இவற்றைத் தனது அறுவைசிகிச்சைத் திறனால் சரிசெய்திருக்கிறார்.  சுஸ்ருதர் அறுவை சிகிச்சையை 8 வகைகளாகப் பிரிக்கிறார். 125 வகையான மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி 300 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்தவர். அறுவை சிகிச்சைகளின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்.

இந்தியக் கட்டிடக்கலை: 




உலகிலேயே கிரனைட் கற்களால் கட்டப்பட்ட முதல் கோயில், தஞ்சை பெரிய கோயில். ஐந்தே வருடங்களில் கட்டப்பட்ட நிரந்தர ஆச்சரியம்! சந்திரகுப்த மௌரியர் காலத்தில் மலைகளுக்கிடையில் செயற்கையாகப் பாதை அமைக்கப்பட்டு சுதர்சனா என்ற ஏரி ஏற்படுத்தப்பட்டது. மதுரை, சிதம்பரம், திருவண்ணாமலை, கும்பகோணம், காஞ்சிபுரம் இன்னும் இன்னும் எத்தனை உதாரணங்கள் தேவை நம் கலைப் பெருமை சொல்ல?


இந்திய விளையாட்டு:





 சதுரங்கம், சீட்டு, பரமபதம் போன்ற விளையாட்டுகள் இந்தியர்கள் உலகிற்கு அளித்த கொடைகள்.           இவை 
வெளிநாடுகளில் வேறு முலாம் பூசப்பட்டு வேறு பெயர்களில் வெளியானது.

இந்தியத் தற்காப்புக் கலைகள்:


ப்ரூஸ்லீயும், ஜாக்கிசானும் என்றென்றும்  நமக்கு நன்றிக்கடன் பட்டவர்கள். கராத்தே, ஜூடோ போனற கலைகளின் பிறப்பிடம் இந்தியா. இதுதவிர சிலம்பம், குஸ்தி, களரி, வர்மம் போனற கலைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் முன்னோர்கள்.



இந்திய இசையும், நடனமும்:

ராகங்கள் சாம வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்று பிரபலாமய் இருக்கும் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசைவடிவங்கள் பிறந்தது சாமவேதத்திலிருந்துதான் என்கிறது ஆராய்ச்சி முடிவு.



2000 வருடங்களுக்கும் முந்தையது நமது பாரத பாரம்பரியம். பாவம், ராகம்,தாளம் ஆகிய மூன்றும் இணைந்துதான் பாரதம் என்றாகியது.,ராகம், பாவம், தாளம், இசைக்கருவிகள், குரல் இவற்றின் பின்னணியில் நம்மை மகிழ்விக்கும் நடனக்கலை இந்தியர்களின் நுட்பமான ரசனைக்கு சிறந்த சான்று.


இன்னும் யோகா, பௌத்தம், சமயங்கள் போன்ற சொல்லாத சாதனைகள் ஏராளம் இருக்கின்றன. இந்த மண்ணில்தான் அற்புதங்கள் ஏராளம் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியனாகப் பிறந்தது தற்செயல்நிகழ்வு. ஆனால் ஆயுள்முழுவதும் பெருமைப்படும் நிகழ்வு. வாழ்க நம் நாடு! ஜெய்ஹிந்த்!



4 comments:

தகிடுதத்தம் said...

மிகச்சிறப்பான தகவல்கள்..பெருமைமிகு பாரதம்.

Yoga Yuva Kendra said...

ஊக்கத்திற்கு நன்றி ரமணி.

suganya shankar said...

Sir,

We have learnt to value and appreciate INDIA so much more once we have gone abroad. Our culture and tradition make us proud. Thanks to you, now we are slowly understanding the significance of some of our ancient treasures.

At the same time there are a few aspects of INDIA which shame us. Hope we can overcome our individual caste, religion, community, language barriers and unite as ONE INDIA. That would certainly pave way for us to become the great nation we were.

PROUD TO BE AN INDIAN.

gayathri said...

இந்தியனாய் இருக்க பெருமிதம் கொள்வோம் .வாழ்க பாரதம் .பாரதத்தின் பெருமையை உணர்த்திய தங்களுக்கு நன்றி மாஸ்டர்.

Post a Comment