Total Pageviews

Friday, March 30, 2012

சிந்திப்போம்.............


பாவப்பட்டச் சிட்டுக்குருவிகள்!




சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா....


சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...,

ஏ குருவி... சிட்டுக்குருவி...


-இப்படியெல்லாம் இன்னும் கொஞ்சநாட்களுக்குப் பிறகு பாடவே முடியாது. காரணம்? சிட்டுக்குருவி என்று ஒன்று இருந்தால்தானே! அவையும்கூட அன்னப் பறவை, சக்கரவாக பறவை போல, ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்த பறவைகளின் பட்டியலில் இடம்பெறும் நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன செல்போன் டவர்கள். ஆம், அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் வீரியம்... சிட்டுக்குருவிகளுக்கு எமனாக இருக்கிறது என்று கண்டறிந்து சில ஆண்டுகளாகவே எச்சரித்து வருகின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

இந்நிலையில்,  20/03/12 உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, சென்னையிலிருக்கும் சிட்டுக்குருவிகளைக் கணக்கெடுக்கத் தீர்மானித்துள்ளது இயற்கை ஆர்வலர்கள் சங்கம்!

ம்... இந்த மனிதனால் எதையுமே படைக்க முடியாது. ஆனால், எதையும் அழிக்க முடியும். இதற்கு ஏற்கெனவே பல உதாரணங்கள் உண்டு. சமீபத்திய பரிதாப உதாரணம்... பாவப்பட்ட சிட்டுக்குருவி!



சிட்டுக்குருவி மட்டுமல்லாது பட்டுப்பூச்சிகளும் அழிந்து விடும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.........மற்றொரு சமீபத்திய ஆராய்ச்சி, வரப்போகும் மிகப்பெரிய அபாயத்தை எண்ணி அதிர்ச்சியடைய வைக்கிறது......தேனீக்கள் தேன் சேகரித்துவிட்டுத் திரும்பும்போது தனது கூட்டிற்குத் திரும்பும் வழிப்பாதையை இந்த செல்போன் டவர் ஏற்படுத்தும் அதிர்வுகள் மறைத்து விடுகிறதாம் . இதனால் என்ன நிகழ்ந்து விடப்போகிறது? என நீங்கள் நினைக்கலாம். வேலைக்காரத் தேனீக்கள் கூட்டிற்குத் திரும்பாவிடில் ராணித்தேனீ இறந்துவிடும் .....இதன் பின் விளைவாகத் தேனீக்கூட்டமே அழிந்துவிடும் அபாயமேற்படும். பட்டாம்பூச்சிகளும்,தேனீக்களும் அழிந்துவிட்டால் மகரந்தச்சேர்க்கை ஏற்படாது...இதன் தொடர் விளைவாக ஒட்டுமொத்தத் தாவர இனமே அழிந்துவிடும் ....தாவரத்தை நம்பி வாழும் கால்நடைகள்?.....மனித இனம்?.....








சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வழிமுறை 1 :


தண்ணீர் : சிறிய மண் சட்டியிலோ அல்லது தட்டையான ஒரு பாத்திரத்திலோ, தினமும் தண்ணீர் வைக்கலாம். அன்றே அப்பொழுதே பறவைகள் வந்து நீரை அருந்தும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் வையுங்கள். வந்து பழகிய பின்னர், அவை தொடர்ந்து வரும்.




சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வழிமுறை 2 :



உணவு : வளர்ந்து வரும் கான்கிரீட் காடுகளில் சிட்டுக்குருவிகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வது அவசியம். கம்பு போன்ற தானியங்களை அவற்றுக்கு உணவாக வழங்கலாம். அன்றே அப்பொழுதே பறவைகள் வந்து உண்ணும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆனாலும் தொடர்ந்து வையுங்கள். வந்து பழகிய பின்னர், அ
வை தொடர்ந்து வரும். குறிப்பாக நாட்டுக் கம்பு அளவில் சிறியதாக இருப்பதால் அவற்றை விரும்பி உண்ணும். ஒரு மண் தட்டிலோ, மாடியிலோ, வீட்டின் சுற்றுச் சுவரிலோ, இவற்றை வைக்கலாம்..!!




சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வழிமுறை 3 :

புழு, பூச்சிகளை உண்ணும் சிட்டுக்குருவிகள், அதன் குஞ்சுகளுக்கும் அவற்றை உணவாக கொடுக்கும். நாம் வளர்க்கும் அழகுச் செடிகளில், குரோட்டன்ஸ் போன்ற செடிகளில், புழு பூச்சிகள் வராது. எனவே நம்முடைய மண் சார்ந்த பாரம்பரிய செடிகளை வீட்டைச் சுற்றி வளர்க்கலாம். அவற்றில் இருக்கும் புழு பூச்சிகள் சிட்டுக்குருவிகளுக்கு உணவாகும்.

Thursday, March 29, 2012

எழுத்தின் இலக்கே

அவ்வை சொன்னாள்; அகரம் எனக்கு;
அதுவே என்றன் வாழ்வின் கணக்கு;
கவ்விய மனது; கருதுவ தெல்லாம்
கவிதையை இங்கு விதைப்பதன்பொருட்டு!


வள்ளுவன்,மூலன்,வார்த்தைகள் எல்லாம்
வரிசை கட்டிய தமிழ் ஊற்றாக
வள்ளல் பெருமான் போன்றோர் வடிவில்
வந்த ஞானியர் யாவரும் இங்கு


விதைத்துச் சென்ற வித்துக்கள் மண்ணில்
விளைந்தவை இங்கு அடர்வனம் ஆக;
புதையலைப் போலத் தேடி அவற்றைப்
புலவோர் பலரும் பொங்கலிட்டனர்!


சித்தரும் முத்தரும் சிந்தித்த மொழியென
பித்தன்யானும் பேயாய் அலைந்து-
புத்தியில் அவற்றைப் புரிந்து கொண்டே
புதுப்புது விளைச்சலை அறுவடை செய்து-


நட்ட நிசியிலும் நடுநின்றுணர்ந்து
எட்டிப் பிடித்ததை இம்மொழியாக்கி,
எட்டுத்திசையிலும்கொட்டி முழங்கி
எவரும் உண்ணத் தகுந்தவை என்றே-

கம்பன் இளங்கோ,காட்டிய தமிழில்
கொம்பன் பாரதிகூறிய வாறே
நம்தொழில் எழுத்தென;நாட்டுக் கீந்து,
நல்லவை நவின்று சோரா திருப்பது!


நம்பிக்கை கொண்டு நாடிடுவோர்முன்
நாளும் இதையே நந்தா விளக்கென-
தெம்புடன் சொல்லித் தெளிவுடன் வாழ்வது:
தேசம் இதனைத் தெரிந்து கொள்க!


எதையும் இங்கு எதிர்கொண் டிருந்து
எதிலும் கலங்கா மலைபோல் நின்று
விதியை மாற்றும் விதியை எழுதி
விதைப்பது தான்என் எழுத்தின் இலக்கு!

Monday, March 26, 2012

எச்சரிக்கை......



என்ன 
செய்தால்
உங்களுக்கு கோபம் வரும் "
‘ஏன்’ 
‘சரி...சரி... என்ன சொன்னால்
கோபப் படுவீர்கள்"
‘எதற்கு கோபப் படவேண்டும்’ 
‘அப்போ உங்களுக்கு கோபமே
வராதா’ 
‘நான் சொன்னேனா’ 
‘அப்போ
கோபப் படுவீர்களா’
‘படலாம்’ 
‘கோபப் அப்டுவீங்களா?!!!
கோபப் படுவீங்களா நீங்க!!!?’ ஆச்சர்யத்தில்
புருவம் உயர்த்திக் கொண்டார்
சிரித்துக் கொண்டேன்
‘சாதுங்க நீங்க’ 
அவரையேப் பார்த்தேன்
‘ஆழமான பார்வை உங்களுக்கு’ 
‘அப்படியா?’
‘ஆமாங்க’
‘உண்மையாகவா?’
‘அட சத்தியமாங்க’
‘ஏன் நீங்க அப்படி
பார்க்க மாட்டீர்களா?’
‘பார்ப்பேனே.. பார்ப்பேனே.. இதோ..’ அவர்
கண்களை உருட்டிக் காட்டுகிறார்.
‘அசிங்கமா இருக்கே’ என்றேன்
‘ஏன்..???????????????!!!!!!!’
‘ஆமாங்க நல்லாவே இல்ல’ 
‘ஏன்..???????????????!!!!!!!’
‘குருடு மாதிரி இருக்கு?’
‘குருடா….!!! யாரு?’
‘நீங்க தான்
ஆந்தை மாதிரி முழிக்கிறீங்க’ 
சற்று நக்கலாகச்
சிரித்துக் கொண்டேன்
‘நானா???!!! நானா???!! ஆந்தையா??
என்னை பார்த்தா ஆந்தை மாதிரி தெரியுதா???
நீ மட்டுமென்ன யோக்கியமா – உனக்கும் தான்
நொள்ள கண்ணு’ என்றார் வெடுக்கென்று
‘இப்பதான் சாது’ன்னீங்க
‘ஐயோ; ஐயோ; நீயா சாது!!?
மொடாகண்டன் நீ’
‘ஆழமான பார்வைன்னு கூட
சொன்னீங்களே’
‘அப்போ சொன்னேன்
இப்போ இல்லை, நீ அப்படியில்லை’ என்றார் கோபம்
தலைக்கேறியவராக
‘ஒரே நிமிடத்தில் மாறிவிட்டேனா’ என்றேன்
‘நீ எப்பவுமே
இப்படித் தான் போல
நான் தான் தவறாகப் புரிந்துக் கொண்டேன்’ என்றார்
‘சரி, இப்போவாவது
புரிந்துக் கொண்டீர்களா’ 
‘புரிது புரிது; நீ போ’ என்று
சலித்துக் கொண்டார்
நான் மௌனமாக அங்கிருந்து
நடக்கலானேன்
அவர் என்னை
பைத்தியம் என்று
பக்கத்தில் இருந்தவரிடம்
கோபமாக பேசிக் (பற்ற வைத்துக்) கொண்டிருக்கிறார்.
நான்
திரும்பிக் கூட
பார்க்கவில்லை அவரை
அவரின் சப்தம்
என் காதில் வெகு வேகமாக
குறைந்துக் கொள்ளுமாறு
மிக வேகமாக நடக்கிறேன்......
உலகத்தின் நடத்தை........
மனிதரின் மனசு.........
நாம் தலையாட்டும் வரை தான்;
ஒரு கண்ணைப் பற்றிப் பெருமை பேசினால்
இரு கண்ணையும் பாதுகாக்க
தயாராக இருங்கள் என்பது மட்டுமே என்
உலகத்திற்கான எச்சரிக்கை!

Saturday, March 24, 2012


ஒரு சாதாரணவாழ்க்கையைவிட
மேம்பட்ட யோகவாழ்வில்
தன்னை இணைத்துக்கொள்ள
வருகைதரும்
உங்கள் அனைவரையும்
யோகயுவகேந்திரா
வருக! வருக!
என வரவேற்கிறது.

ஓம் தத் சத்




Wednesday, March 21, 2012

அறையை அடைத்துக்கொண்டு தூங்குபவரா? ...இதைப்படிங்க!!!!








நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE),சிறு நீரகக் கல்,  மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிகால் வலி,போன்ற வாத நோய்கள் உண்டாக வாய்ப்பு அதிகம்.


யோக வாழ்வியலின்படி ,  சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று யோகிகள் கூறுகிறார்கள்.  முன்பெல்லாம் இது என்ன கூத்து, காற்றுக்கும் தீட்டா என்று நான் எண்ணியதுண்டு.இதைப்பற்றிய விளக்கங்களைப் பல குருமார்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறேன்.அப்போதெல்லாம் விளங்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு  10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு நீங்கள் ஒருவர் மட்டுமே தூங்கினால் 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே யோகிகள் தீட்டு என்கிறார்கள்.

பொதுவாகக் காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தால், அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியான விகிதத்தில் வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது மட்டுமல்லாது நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையைச் செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது, மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் இனியும் தூங்காதீர்கள். 

Tuesday, March 20, 2012

அன்றும் இன்றும்........

அன்று...
எரிக்க புகைக்கும் விறகு
எரியூட்டும் எரிபொருள்....
ஏழைத் தாயின் கண்ணீர்...!
இழுத்து ஊதி.... ஊதி ஊதி...
இன்னமுது படைக்கும்
ஏழையின் சோற்றுப் பானை
சிரிக்கும்....
வெந்ததாய் வெளிவந்து...!

இன்று...
குறைவாய் நேரம்
குக்கர் வாய் இறுகும்...
அரிசி கலப்பட வேதிப்பொருள்
அலச நேரமின்றி...
அவசர சமையல்....!
மூடி மூச்சிரைக்கும்
குக்கருக்கு "மாரடைப்பு"..!
காப்பாற்ற விசிலடிக்கும்.
"உள்ளுக்குள்"  மூடி மறைக்கும்
"நாகரீகச் சமையல்". 

அன்று
உழைப்பின் மிகுதி
பிழைப்பின் தகுதி.
வாழ்வின் நித்திய
கடமையில் நிறைவேறும்
ஆசனங்கள்... அத்தனையும்..!
வியாதியின்றி ஆயாவும்...
மகளும், மருமகளும் ஆனந்த
ஆர்ப்பரித்தார்கள்.

இன்று..
தும்மல், சலம், இறுமல்,
எல்லாமும் மருத்துவ மனையில்..!
இருப்பிடம் தற்காலிகம்.
மருத்துவமனை வாடகை வீடு...!
கண்டிப்பாய் பிரசவம் "அறுவை"...!
அறுவை என்பதனாலே....
அளவோடு பிள்ளை...!
தலைவலிக்கு போய்...
தாங்கமுடியா நெஞ்சுவலி...!
வேண்டா விருந்தாய்..சில வியாதி.
இலவச இணைப்பாய்... சில வியாதி.
சொத்தை எழுதிக் கேட்கும்
"நோய்ப் பரப்பு மையங்கள்"...
 

Friday, March 16, 2012

வலைப்பூக்கள்





எண்ணமென்னும்  கடலுக்குள் தத்தளிக்கிறேன் ,
இறைவா   தத்தளிக்கிறேன்,

கரை சேர  முயற்சிக்கும் ஒவ்வொரு
முறையும் முழ்கடிக்கப்படுகிறேன் இன்னும் 

ஆழமாக முழ்கடிக்கப்படுகிறேன்.

எனக்குள் நானே திமிறிக்கொண்டும்
தினறிக்கொண்டும் முயற்சிக்கிறேன்,
இறைவா  முயற்சிக்கிறேன்.
என் நிலை பார்த்து  நகைக்கும் உன்னை
வேண்டுகிறேன்,இறைவா வேண்டுகிறேன்.
என்னை மீட்டு எந்தன் ஆன்மம் உணர
அருளும்படி வணங்குகிறேன்,

இறைவா வணங்குகிறேன்.




உங்களது  வலைப்  பூக்கள்  இருபது  வருடங்களுக்கு  முன் எனக்கிருந்த 
கவிதை ஆர்வத்தை மீண்டும்  தூண்டி  விட்டது .நான் உண்ணும் உறங்கும் 

நேரம் தவிர என் கரங்களில் வலைப் பூக்கள் மட்டுமே.......... படிக்கப்,படிக்க கண்களில் கண்ணீர் கசிய ஆனந்தமடைகிறேன் ! சிறு  வயது  முதலே  என்னக்கிருந்த ஆன்மீகத் தேடலையும் சித்தர்களைப் பற்றி அறியும் ஆர்வத்தையும் ஓரளவுப் பூர்த்தி செய்த  மகிழ்ச்சியில் ,


புத்தருக்கு போதிமரத்தடியில்  கிடைத்தது  போல்,ரமணருக்கு கிடைத்தது போல்,  அருணகிரிநாதருக்கு கிடைத்தது போல், எல்லோருக்கும்  ஓர்  இரவில் கிடைத்து  விடுவதில்லை ஞானம்.  தீவிரப் பயிற்சியினாலேயே அது  சாத்தியமாகிறது .டேஹ்ராபே,பால்ப்ரிண்டனுக்கு  விளக்கியது போல் நீங்கள்  உணர்ந்ததை, உங்களுக்கு  தெரிந்ததை ,அறிந்ததை, எங்களுக்கு  பகிர்ந்தளிக்கும் உங்களது  ஞானம் மேன்மையானது, உயர்வானது, போற்றதக்கது.என்னைப் போன்ற ஞான ஸூன்யங்களை உங்களது  எழுத்துக்கள் சிறிதேனும் தட்டி  எழுப்பும் என்பதில் ஐயமில்லை.


நீங்கள் இது  போன்று  மேலும் பல நூல்களை  வெளியிட  வேண்டும்  என்று  தாழ்மையுடன்  கேட்டுக் கொள்கிறேன் .

           
வலைத் தொடர்பு  இல்லாதவர்களுக்கு உங்களது  எழுத்துக்கள் சென்று  பயனடையும்  படி செய்த  திரு.வேல்  விஜயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த  நன்றியைத் தெரிவித்து  கொள்கிறேன் .



             மாஸ்டர் ..........ஒரே  ஒரு  வேண்டுகோள்  இதை  கேட்பதற்கு  எனக்கு சிறிதும் தகுதி இல்லைதான் ,மனிதனின் பேராசைக்கு அளவு இல்லையே ,எங்களை எப்படியும் த்யானம் வரை அழைத்துச்செல்லுங்கள் மாஸ்டர்.




அன்புடன்,
வீணா,
யோகயுவகேந்திரா