Total Pageviews

Wednesday, May 9, 2012

"குப்பை" கடவுள்







வீட்டருகே குப்பை கொட்டினார்கள்.
 கெட்ட வார்த்தைகளில் திட்டினார்,
அப்போதும் கொட்டினார்கள்!
தெருவில் இறங்கிசன்டையிட்டுப் பார்த்தார்,
நிறுத்துவதாயில்லை.
"பைத்தியங்கள் இங்கேகுப்பை கொட்டட்டும்!"என்று எழுதி வைத்தார்,
ஒத்துக் கொண்டது போல்கொட்டி வைத்தார்கள்!
சுவர் முழுதும் கடவுள்களைவரைந்து வைத்தார்.
யாரும் குப்பை கொட்டுவதில்லை!
தந்திரம் தெரிந்தவர்களுக்குக்கடவுள் ஒரு கருவி!

Friday, May 4, 2012

புத்தத்தேடல்.....





சுத்தோதனின் உத்தம புத்திரன், 
அருமை மகன், அவன் பெயர் சித்தார்த்தன்,
கண்ணின் இமைப்போல் காக்கப்பட்டான் 
உலகம் தெரியாது வளர்க்கப்பட்டான்
ஜாதகம் சொன்னதில் தந்தைக்குச் சாதகம் இல்லை! 
'பெரிய அரசனாவான் அல்லது யோகியாவான்'
அரசகுமாரன் ஆக்கும் முயற்சி கொடுக்கப்பட்டது 
பல பயிற்சி தரப்பட்டது
தந்தையின் அதிக பராமரிப்பு........
தாயின் அதிக ஆதரிப்பு, 
கவசமான பெற்றோர்கள் சூழ்ந்து காக்கும் ரக்ஷகர்கள்
அரண்மணைக்குள் பல வித்தைகள் விதைக்கப்பட்டன 

மனம் நிறையவில்லை, எதிலும் சுவையில்லை
மனதில் தெளிவில்லை ராஜபோகத்தில் ஈர்ப்புமில்லை

அவனுக்குத் தேவை ஒரு மாற்றம் அதுவே மாப்பிள்ளைத் தோற்றம்
வந்தால் கிளிபோல் ஒரு கன்னி 'யசோதரா' 
அவனையே எண்ணி,
ஒரு மகனையும் அளித்தாள் 
ராஹுல் என்ற பெயரும் கொடுத்தாள்

அந்த நாள் யசோதராவிற்குச் சோதனை நாள்
உலகத்திற்கு நல்ல நாள் 
வெளி வந்தான் சித்தார்த்தன்
தேரோட்டி உதவியுடன்
தேரிலேறி பவனி வந்தான்
 
வாழ்க்கையில் திருப்புமுனை
கௌதமபுத்தர் ஆன அரிய சுனை.


கண்டான் ஒரு காட்சி
வந்தது ஒரு சவம்
எங்கும் நிரம்பிய சோகம் 
சிவமாய் இருந்த உடல்
இன்று ஏன் சவமானது? ஒரே குழப்பம்!
மனதிலே கேள்விக்குறி விரகித்தியடைந்த மனம்
கேட்டது ஒரு வினா இதுவா வாழ்க்கை?

அங்கொருத் தொண்டு கிழவன்
கூனல் முதுகு, கையில் தடி, காலில் நடுக்கம்
மனம் பதைபதைத்தான் சித்தார்த்தன்
இதுவா வாழ்க்கை?


தொடர்ந்த பிரயாணம், கண்டான் அங்கு ஒரு நோயாளி
உடலாட உள்ளம் தாக்க கண்கள் சொருக மரமாக சாய
ஆ இது என்ன? இப்ப்டியும் ஒரு பிறப்பா ?
இதுவா வாழ்க்கை?


வேண்டாம் வேண்டாம் ஆடம்பரம் வேண்டாம்
ராஜ போகம் வேண்டாம் 
நிம்மதி
வேண்டும்!!!! அமைதி வேண்டும்!!!!!!

தேடல் தொடங்கியது
பிறப்பின் காரணம் தேடல்!!!!!! படைப்பின் ரகசியம் தேடல்!!!!!!


மனம் தத்தளித்தது வீடு கசந்தது, 
நடு நல்லிரவு
மனைவி யசோதராமீது ஒருபார்வை
பிஞ்சு பாலகன் மீது ஒரு பார்வை
வைராக்கியம் புகுந்தது எல்லாம் உதறினான்
உள்ளோளி தேடினான் திரும்பிப் பாராமல்
வேகமாய் நடை தொடர்ந்தது!!!! 
தேடலும் தொடர்ந்தது!!!!
தொடர்ந்த தேடல் கயாவில் நின்றது 

தியானத்தில் நிலைத்தது
நீண்ட தியானம் அரச மரத்தின் கீழ்
தன்னை மறந்த நிலை 
திடீரென்று ஒரு ஒளி
பரமானந்தநிலை
உள்ளே ஒளி தெரிந்தது 
ஞானோதயம் பிறந்தது
சித்தார்த்தன்'கௌதமபுத்தர்' ஆனார் 
"எட்டடி பாதைகள்
புத்தமதத்தின் சிறப்பு"
ஆயிரம் பிறையும் கண்டார்
'ஆசியாவின் ஒளி'யும் ஆனார்



புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

Thursday, May 3, 2012

பயணங்கள் முடிவதில்லை....


பயணங்கள் முடிவதில்லை......





முன்பெல்லாம் திருவண்ணாமலைச் செல்வதற்கு அதிக நேரம் தேவைப்படும்...புறவழிச்சாலைகள் போடப்பட்டப் பின் அண்ணாமலைப் பயணம் எளிதாகிவிட்டது.....அதிலும் ஸ்ரீதர் அண்ணன் டிரைவிங்கில் திருவண்ணாமலை போவது.....ஒரு சத்சங்க அனுபவமாகவே மாறியிருக்கிறது.......புறவழிச்சாலை திட்டமெல்லாம் நம் நாட்டில் மிகச் சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும் சங்கதிகள். நம் உடலுக்குள்ளானப் பயணப் பாதையெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய் போடப்பட்டுவிட்டது. ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையானப் பயணம் மேற்கொள்ளவில்லை எனச் சொல்லலாம்.

நம் உடல்..... -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் எத்தனைப் பொறியியல் வல்லுனர்கள் உண்டோ, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி உருவாக்கின மாதிரி அப்படியொரு டிசைன்.

நமக்கு தேவையான உயிராற்றல்....ஆகாயப்பிராணனாய்... அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவுமான ஆற்றலை ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவைதானே?.....பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும்தானே? இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக இருந்தாலும்......வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.

உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் டிராபிக் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டுணர்ந்து சொன்ன யோகிகளின் ஞானம் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும் நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி, பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.







முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?

உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த சாலை.
உயிரும் உடலும் இயங்கத் தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற பாகங்களுக்கு 
கிளை சாலைகளான நாடி,நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான் நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம் சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள் வளர்ந்தால் என்ன ஆகும்..?
காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல் தேய்க்க வேண்டியிருக்கும்.
உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் மூலப்பிரகிருதி நம்மேல் வைத்திருக்கும் கருணை.

சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம் ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும். அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை

பயணப்பாதை விவரம்.
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.

யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள் என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை ஆதாரமாகக்கொண்டு இயங்கிவருகின்றன.



இம்மாதிரியான விஷயங்களை நான் கேள்விப்பட்டபோது உங்களைவிட மிகவும் சந்தேகப்பட்டேன்.தேடலும் அனுபவமும் குருவருளும், திருவருளும்தான் விடைகள் சொல்லித்தந்தன.


முதலில் இந்த மையங்களை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதியது உண்மையா..? ஆம்..உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடையும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.




எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் இல்லங்களிலியே நடத்தியும் இருகிறோம், இப்போது நாம் காட்டும் பார்வை உங்களுக்கு வியப்பாககூட இருக்கும். மணப்பெண் அலங்காரத்தில் நகை அணிவித்தல் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த மணப்பெண்ணின் நகை அணிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்தக் கட்டுரையின் தேவை நிறைவேறிவிடும்.

1.உச்சந்தலையில் அணிவது "பில்லை"- சகஸ்ராரத்திற்கான அணிகலன்.
2.அங்கிருந்து அதை இணைத்து- நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி சுட்டி"ஆக்ஞாவிற்கான அணிகலன்.
3.கழுத்தில் நெக்லெஸ் என ஒன்று அணியப்படுகிறதே, அது விசுக்திக்கான அணி.
4.சங்கிலியோடு- ஒரு பதக்கத்தை இணைத்து (chain+dollar) மார்புவரை அணிகிறோமே அது "அனாகதத்திற்கான அணீ.
5.மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும் "ஒட்டியாணம்"-மணிபூரகத்துக்கான அணி.
6.இடையில் தளர்வாய் தொங்கவிட்டமாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான அணி.
7.முலாதாரத்திற்கான அணியைப் பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.


மனமும் எண்ணமும்- புத்தியும்,சித்தியும்-விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த புள்ளிகளில்தான் இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்க்ம்.இப்போது அதன் முக்கியம் புரிந்திருக்கும் அல்லவா..?

அந்த ஏழு புள்ளிகளில் அப்படி என்ன நடக்கிறது..?


யோகவியலாளர்கள் எண்ணற்ற விளக்கங்களைத் தருகிறார்கள். ஆனால் யதார்த்தமாக எனக்குத் தோன்றுவதை கூறுகிறேன்.

சகஸ்ராரம் -எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மா இருக்கும் இடம்.
ஆக்ஞா -நான் எனும் சுயம் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் இடம்
விசுக்தி- நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம்- பேச்சாய்-மொழியாய் வெளிப்படுத்தும் மையம்.
அனாகதம்-நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு உடன்பட்டோ,முரண்பர்ட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.
மணிபூரகம்-வெளி உலகில் பிரதிபலிப்பைக் கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய ஏற்பு ஜீரணமையம்.
சுவாதிஷ்டானம்-செரிமானத்திற்குப் பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும் மையம்
மூலாதாரம்- ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று- அடுத்த செயலுக்கு ஊக்கம் பெறும் மையம்.

இவ்வுல வாழ்க்கையில் -பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான் உள்வாங்குகிறோம்.உணர்கிறோம்,செரிக்கிறோம், தன்வயமாக்குகிறோம்.,சக்தி பெறுகிறோம்.இறைக்கு அர்ப்பணிக்கிறோம்

இந்த பின்வரும் சொற்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள்- 
"நான் நானாவே இல்ல" "நெனச்சிகூட பார்க்க முடியல"
"என்னால விழுங்க முடியல..""(i can't gulf it) ,"என்னால ஏத்துக்க முடியல" "என்னால செரிக்க முடியல" 

நான் நானா இல்லன்னா -பைத்தியம்
நெனச்சிக்கூட பார்க்க முடியாத நிலை -குழப்பம்
விழுங்க முடியலன்னா- வாந்தி.
ஏத்துக்க முடியலன்னா- மாரடைப்பு.


செரிக்க முடியலன்னா -டைரியா - இதெல்லாம் வெளியே இருந்து வரும் நம் உடலுக்குள் வரும் பொருளுக்கானது மட்டுமல்ல - கருத்துக்களுக்கும் ஆனது.

பயணம் சுகமானால்-எந்த மையத்திலும் குழப்பமில்லை என்று அர்த்தம்.

என்ன நண்பர்களே! உள்முகப் பயணத்தைத் துவக்கி விட்டீர்களா?

Thursday, April 26, 2012

அய்யோ.....அய்யோ....









நவீன கட்டண(மில்லாத) கழிப்பிடம் 




இதுதான் ஸ்ட்ரைட்டனிங்கா........?



இந்த பைக் ல வீலிங்....பண்ணலாமா...? 



இலவச டிவி யோ....?









ஆய கலைகள் 64


ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த
அறுபத்துநான்கு கலைகள் என்னென்ன என்பதைத் தெரிந்தவர்கள் மிகக் குறைவே.
என் நண்பர் ஒருமுறை கேட்டபோது அந்த அறுபத்து நான்கு கலைகளையும்
பட்டியலிட்டுச் சொன்னார். பிரமிப்பாக இருந்தது எனக்கு. உங்களுக்காக
அவற்றை இங்கே தருகிறேன்.

1. ‌முதலில் எழுதப் பழகும் மொழியின் அட்சரங்கள், 2. லிகிதம், 3. கணிதம்,
4. வேதம், 5. புராணம், 6. வியாகரணம், 7. ஜோதிடம், 8. தர்ம சாஸ்திரம், 9.
யோக சாஸ்திரம், 10. நீதி சாஸ்திரம்,
...
11. மந்திர சாஸ்திரம், 12. நிமித்த சாஸ்திரம், 13. சிற்ப சாஸ்திரம், 14.
வைத்ய சாஸ்திரம், 15. சாமுத்ரிகா லட்சணம், 16. சப்தப் பிரம்மம், 17.
காவியம், 18. அலங்காரம், 19. வாக்கு வன்மை, 20. கூத்து,

21. நடனம், 22. வீணை இசை, 23. புல்லாங்குழல் வாசிப்பு, 24. மிருதங்க இசை,
25. தாளம், 26. ஆயுதப் பயிற்சி, 27. ரத்னப் பரீட்சை, 28. கனகப் பரீட்சை
(தங்கம் எது என அறிதல்), 29. யானை ஏற்றமும் ஜாதி அறிதலும், 30. குதிரை
ஏற்றமும் ஜாதி அறிதலும்,

31. ரத சாஸ்திரம், 32. பூமியறிதல், 33. போர்முறை சாஸ்திரம் மற்றும்
தந்திரம், 34. மற்போர் சாஸ்திரம், 35. வசீகரித்தல், 36. உச்சாடனம், 37.
பகை மூட்டுதல், 38. காம சாஸ்திரம், 39. மோகனம், 40. ஆகர்ஷணம்,

41. ரஸவாதம், 42. கந்தர்வ ரகசியம், 43. மிருக பாஷையறிவு, 44. துயர்
மாற்றுதல், 45. நாடி சாஸ்திரம், 46. விஷம் நீக்கும் சாஸ்திரம், 47. களவு,
48. மறைந்துரைதல், 49. ஆகாயப் பிரவேசம், 50. விண் நடமாட்டம்,

51. கூடு விட்டுக் கூடு பாய்தல், 52. அரூபமாதல், 53. இந்திர ஜாலம், 54.
மகேந்திர ஜாலம், 55. அக்னி ஸ்தம்பனம், 56. ஜல ஸ்தம்பனம், 57. வாயு
ஸ்தம்பனம், 58. கண்கட்டு வித்தை, 59. வாய் கட்டும் வித்தை, 60. சுக்கில
ஸ்தம்பனம், 61. சுன்ன ஸ்தம்பனம், 62. வாள் வித்தை, 63. ஆன்மாவைக்
கட்டுப்படுத்துதல், 64. இசை.



----வேல்விஜயன்

Saturday, April 21, 2012

காலை முழுவதும் படிப்பு மாலை முழுவதும் விளையாட்டு


சித்திரை வருடப்பிறப்பு ,ரொம்ப அதிகாலை.
குற்றாலம் ரோடில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.
 “என்ன சிவா, இவ்வளவு காலைல? கோவிலுக்கா?”
"இல்லைங்கையா, தென்காசி கோவிலுக்குள் இருக்கிற சித்தர்பீடத்துல இன்னைக்கி குருபூஜை.....காசிமேஜர்புரத்துல ஒருத்தர்கிட்ட செண்பகப்பூ சொல்லியிருந்தேன்....வாங்கிட்டு போகலாம்னு......"
"ஓ...செண்பகப்பூவில் அப்படி என்ன விஷேசம். "
"விஷேசதுக்காக இல்லை.... இது நம்ம பக்கத்துல கிடைக்கிற ஒரு அபூர்வமான பூ அவ்வளவுதான் . ஆனா நீங்க சொன்ன பிறகு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது, ஒவ்வொரு மலருக்கும் ஒரு விஷேச குணம் உண்டு. மருத்துவ குணமில்லாத மலரே கிடையாது என்பது எனது குருமார்களிடமிருந்து கற்றுகொண்ட செய்தி. இந்த செண்பக மலரின் வாசனை, ரத்த ஓட்டத்தை வேகமாக்குமுனு சொல்வாங்க......அதுசரி....இந்த நேரத்துல நீங்க எங்க போறீங்க???
 “பாத்தாத் தெரியல்லையா? மார்னிங் வாக்குக்காக வந்தேன்”
அப்போதுதான் பார்த்தேன். பந்தாவாக ஒரு டிராக் சூட்டும் டீ ஷர்ட்டும் போட்டிருந்தார். சட்டைப் பையில் மொபைல். காதில் இயர் ஃபோன்.
 “டிரஸ்ஸு பொருத்தமாத்தான் இருக்கு. ஆனா நீங்க நடக்கிற ஸ்பீடு.........இந்த வயசுல இந்த ஸ்பீடு வேண்டாமே!!!"
"என்ன சிவா எனக்கு வயசாயிருச்சுன்னா சொல்றீங்க?"
 “நீங்க அப்பமே பெரிய வெயிட் லிப்டருன்னு அப்பா சொல்லி கேள்வி பட்டிருக்கேன்....அதுக்காக, கார்ட்டுல ப்ராப்ளத்த வச்சுகிட்டு இவ்வளவு ஸ்பீட் வேண்டாமேன்னு தான் சொன்னேன்." ”

 “மெல்ல நடந்தா பிரயோஜனம் இருக்காது சிவா?”
 “உண்மைதான். வாக்கிங்கோட தாத்பர்யமே உடம்பில இருக்கிற சர்க்கரையையும், கொலஸ்ட்ராலையும் பர்ன் பண்றதுதான். ஆனா அதுக்காக இவ்வளவு ஸ்பீட் இந்த வயசுல வேண்டாமே."
"உண்மைதான்.....ஸ்பீடா நடந்து பழகிட்டேன்....குறைச்சுக்கிறேன்"
 “கேக்கணும்ன்னு நினைச்சேன். இப்பல்லாம் வாக்கிங் போறவங்க காதுல ஈயற் போன மாட்டிக்குறாங்க.....”
 “மத்தவங்க எப்படியோ, நான் காலைல நல்ல இசை கேட்டுக்கிட்டுத்தான் நடப்பேன்.......இது தப்பு தானா?”
"நீங்க பெரியவங்க.....உங்களுக்குத் தெரியாதது இருக்காது......இருந்தாலும் நம்ம யோக நூல்களெல்லாம் சுவாசத்தை கவனிச்சுக்கிட்டே நடந்தா உடல் ஆரோக்கியத்தோட உள்ள ஆரோக்கியமும் அதிகப்படும்னு சொல்லுது...அதுபோல மாலையில் வாக்கிங் போறதுதான் நல்லதுன்னு சொல்லுது!!!!!
"என்ன காரணம் சிவா?"
நம்ம உடம்புல ஒரு உயிர்கடிகாரம் செயல்பட்டுகிட்டு இருக்கு ...ஒவ்வொரு ரெண்டு மணி நேரத்துக்கும் ஒரு குறிப்பிட்ட உள்உறுப்புல பிராண சக்தி செயல்படுறத நம்ம யோகிகள் அப்பவே கண்டுபிடிச்சிருக்காங்க.....அதன்படி அதிகாலை நேரம் நுரையீரலுக்கான நேரம். இந்த நேரத்துல சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளைத்தான் செய்யணும்.......சுவாச பந்தனம் செய்யாமல், சுவாசத்தை செலவழிக்கும் தேகப் பயிற்சிகளைச் செய்தால் மூலப்பிராண சக்தி குறைஞ்சிடும்......"


"ஓ.....அப்படியா?.......அப்ப வாக்கிங் எப்பதான் போறது?"


"மாலையில் 5 மணிக்கு மேல் உயிர்கடிகாரத்தில் கிட்னிக்கான நேரம் இந்த நேரத்தில் தேகப் பயிற்சி செய்தால் கிட்னியின் வேலைப்பளு கொஞ்சம் குறையும்........மேலும் உடற்பயிற்சியின் களைப்பு தீர இரவில் ஓய்வெடுக்க முடியும்......இதனால்தான் பாரதி கூட "காலையில் படிப்பு ......மாலை முழுவதும் விளையாட்டு" என்கிறான்."


"பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை நேரம் மனத்தை படிக்கக் கூடிய நேரம்.......ஞானத்தேடலுக்கான நேரம்....அதனால்தான் ஜீசஸ், "அதிகாலையில் தேடுகிறவன் கண்டடையப்படுவான்" என்கிறார். சித்தர் சிவவாக்கியர், மூலமாம் குளத்தினுள்ளே முளைத்தெழுந்த கோரையைக் காலையில் எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பேரில் பாலனாகி வாழலாம், பரப்பிரமம் ஆகலாம் ஆலம்உண்ட கண்டர் ஆணை அம்மைபாதம் உண்மையே" என்கிறார்.
"சாயங்காலம்.......நேரங் கிடைக்காதே சிவா"


"பரவாயில்ல.....ஆனால் இவ்வளவு அதி காலையில் வாக்கிங் வேண்டாம்.......அதுவும் அதிகமா செடி கொடிகள் இருக்கிற இந்த மாதிரி இடத்துல வேண்டாம்"
 “செடி கொடி இருக்கிற ஏரியாவிலதான் நிறைய ஓஸோன் கிடைக்கும்”
 “தப்பு”
 “என்ன தப்பு?”
 “செடி கொடியிலர்ந்து வர்ரது ஓஸோன் இல்லை. அது ஆக்ஸிஜன்”
 “சரி அப்படியே இருக்கட்டும். அது நல்லதுதானே?”
 “செடி கொடிகள் சூரிய வெளிச்சம் வந்த பிறகுதான் ஆக்ஸிஜன் வெளியிட ஆரம்பிக்கும். ஃபோட்டோஸிந்தஸிஸின் கழிவுதான் ஆக்ஸிஜன். இந்த அஞ்சரை மணி காலைல தாவரங்கள் ஆக்சிஜன் வெளியிட சான்ஸே கிடையாது”
 “சரி, அதிகாலைல ஓஸோன் ரிச்சா இருக்கும்ன்னு சொல்றாங்களே, அது கரெக்ட்தானே?”
 “ஓஸோன் எப்பவுமே இருக்கு. அதிகாலைல அது டிஸிண்டக்ரேட் ஆகி பழையபடி ஆக்ஸிஜனா மாறும்”
 “புரியல்லை”
 “ஓஸோன்ங்கிறது மூணு ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்த ஒரு அன்ஸ்டேபிள் காம்பவுண்ட். சூரிய ஒளியில இருக்கிற அல்ட்ரா வயலட் ரேய்ஸ் வெளியில இருக்கிற ஆக்ஸிஜனை இரண்டிரண்டு ஆக்ஸிஜன் அணுக்களாகப் பிரிக்குது. இப்படிப் பிரிக்கப்பட்ட அணுக்கள் அன்ஸ்டேபிளாவும், ரியாக்‌ஷணுக்கு அஃப்ஃபினிட்டியோடவும் இருக்கிறதால ஆக்ஸிஜன் மாலிக்யூல்களோட இணைஞ்சி ஒரு அன்ஸ்டேபிள் காம்பவுண்ட் உருவாகுது. அதுதான் ஓஸோன். அல்ட்ர வயலட் ஃபில்ட்டரா இது செயல்படுது”
 “நமக்கு சுவாசிக்கவும் நிறைய ஆக்ஸிஜன் கிடைக்குமில்லே?”
 “இல்லை, அதிகாலைல டிஸிண்டக்ரேட் ஆகி பழையபடி ஆக்ஸிஜனா மாறிகிட்டு இருக்கும். அப்படி டிஸிண்டக்ரேட் ஆகிற ஓஸோனை சுவாசிச்சா உடம்பின் சுவாச அமைப்பு பாதிக்கப்படுது. ஆஸ்த்மா மாதிரி வியாதிகள் ஏற்படலாம்”
 “ஓஸோன் நல்லதில்லைங்கிறீங்களா”
 “சுவாசிக்கக் கூடாதுங்கிறேன்”
"வெரிகுட்..சிவா.....நேரமாயிடுச்சி..... வீட்டிற்கு வாரேன் நிறைய பேசலாம்.


"வணக்கம்"

ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள்

சித்த புருஷர்களின் வாழ்வில் அவர்கள் நடத்திக் கட்டும் அற்புதங்கள் ஏராளம்....அவற்றிலெல்லாம் முதன்மையானது.....சமாதியடைந்தபின்பும் மீண்டெழுந்து பிறிதொரு இடத்திலோ,பிறிதொரு உடலிலோ தோன்றி தனது சீடர்களுக்கு யோகபாடத்தையும், ஞானபாடத்தையும் கற்றுத்தருவது.......இது நவீன விஞ்ஞானத்தால் புரிந்து கொள்ளமுடியாத சூக்கும விஞ்ஞானம்.. இவர்களது நோக்கம் சித்தாட வேண்டும் என்பதல்ல!!!! தனது மேம்பட்ட சீடனுக்கு இப்படி ஒரு விஞ்ஞானம் இருக்கிறது என்பதை உணர்த்தவே.....இதோ ஒரு சித்த யோகியின் வாழ்வைப் பார்ப்போம்.......





ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் மதுரை மீனாட்சியின் அருந்தவப்புதல்வர். 1627ல் மதுரையை அடுத்த சமயநல்லூரில் அண்ணாஸ்வாமி சர்மா, திரிபுரசுந்தரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லை. இருவரும் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தனர். திரிபுர சுந்தரி மனமுருகி பிரார்த்தித்தார். அம்மா, மீனாட்சி ! கிளி ஏந்திய காரிகையே ! எங்களுக்கு குழந்தை பிறந்தால், அதை நாங்கள் கூட வளர்க்க பிரியப்படவில்லையம்மா ! நீயே வைத்துக் கொள். குழந்தை பிறந்ததும், உன் பாதத்தில் விட்டு விடுகிறோம். நீயே அந்தக் குழந்தைக்கு தாயாக இரு, என கண்ணீர் விட்டு மனமுருகி வேண்டினார். ஒன்றுக்கு இரண்டாக இரட்டை குழந்தைகளைக் கொடுத்தாள். பாதங்களில் சங்கு சக்கரங்களுடன் பிறந்த மூத்த குழந்தையை தாங்கள் வேண்டியபடி அன்னை மீனாட்சியிடம் ஒப்படைத்தனர் அந்த தம்பதியர். ஒரு குழந்தையை தாங்கள் வளர்த்தனர்.  கோயிலில் வளர்ந்த குழந்தையை குழந்தைசாமி என பக்தர்கள் அழைத்தனர்.

குழந்தைசாமியின் 16ம் வயதில் அவரது தந்தையும் தாயும் இயற்கை எய்தினர். இதன்பின் வட திசை நோக்கி பயணமானார் குழந்தை சுவாமி. காசி சென்று அங்கே திரைலிங்க ஸ்வாமிகள் என்ற பெயருடன் கடுமையாக தவம் செய்து நிர்விகல்ப சமாதியில் 150 ஆண்டு காலம் காசிநிவாசியாக அருள் பாலித்தார். பின் கங்கை கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம் தவமிருந்தார். (இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார்.) பிறகு கைலாய மலையிலும், மகாமேரு சிகரத்திலும் அமர்ந்து அருள்பாலித்தார். மானஸரோவர், கங்கோத்ரி, அமர்நாத், கேதார்நாத் ஸ்தலங்களில் நிர்விகல்ப சமாதியில் நீண்ட நாட்கள் இருந்திருக்கிறார். கஜானந்தேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் இமாலயத்திலுள்ள ஆதிசங்கர பீடத்தை அலங்கரித்தார். நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தென் தேசத்திற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள்பாலித்துள்ளார். மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில் குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும் வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார். சித்தாலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில், கதிர்வேலப்பர் என்ற திருநாமத்துடன் சமாதியடைந்து அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதன்பிறகு காசியில் அவதரித்த ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்சர் நேரில் தரிசித்து, இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார். குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும், காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார். 1887ல் காசியில் தன்னை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு, அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார். 1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலக்குண்டு சென்றார். அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை நிர்மாணித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். தான் சமாதி ஆகும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறிய சுவாமிகள், அங்கிருந்து வத்தலக்குண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.