Total Pageviews

Wednesday, October 10, 2012

இன்று உலக மனநல தினம்..




உலக மனநல தினம் 1992 முதல் அக்., 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு, ஆறுதல் அளிக்க வேண்டிய தினம்..

மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது.. ஆரோக்கியமான வாழ்வுக்கு,உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம்..

உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்..என புள்ளிவிவரம் கூறுகிறது......எனினும்,நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதித்தவர்களாகவே இருக்கிறோம்...

அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது..நீண்டகால சோகம்,
வேலையின்மை,ஏமாற்றம்,ஏக்கம்,தொடர்தோல்வி,மதுப்பழக்கம்,பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள்..

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர்..
ஆண்டுதோறும் உலகம் முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர்..இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம்..

மனநலம் பாதிக்கப்பட்டால் உடல் நலனும் பாதிக்கப்படும் என்பதை மறக்க கூடாது..

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைஅளிப்பது,மனநிலை மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது..நீண்டகால சிகிச்சை மூலமே, அதுவும் மனப்பிறழ்வு நோயாளிகள் இதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று நினைத்தால் மாத்திரமே ஓரவுளக்கு இதை தீர்க்க முடியும்..மேலும் இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை..

கல்லூரிகளில் மனநிலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்..

மனநலம் பாதித்தவர்களை, தீண்டத்தகாதவர் போலப் பார்ப்பது பிரச்னையை அதிகரிக்கிறது..அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களிடம் கருணையோடு நடந்து கொள்வது மட்டுமே 90 சதவீதம் அவர்களை நோயிலிருந்து விடுபட உதவி செய்யும். 

நகர்ப்புறங்களில் வாழ்வோரிடமும்,அதிகம் படித்தவர்களிடம்(!) இந்நோய் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது..

பாதிக்கப்பட்டவர்களை மதிப்பது,சிகிச்சை அளிப்பது, அவர்களுக்குரிய
உரிமைகளை வழங்குவது போன்றவை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாமல் உள்ளது..

மனநோயை பேய் பிடித்திருப்பதாக நினைக்கின்றனர்..இதனால் மை வைத்தல்,மருந்து வைத்தல், பேய் விரட்டுதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன..இவை மூடநம்பிக்கைகள்..

மனநலம் பாதிக்காமல் இருக்க, மனம் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும்.மகிழ்ச்சியாகஇருக்கவேண்டும்..இசைகேட்பது,
விளையாடுவது,நண்பர்களுடன்கலந்துரையாடுவது,உடற்பயிற்சி,
யோகா,தியானம்செய்வது நல்லது..மற்றவர்களுடன் பழகவேண்டும்..தனிமையைத் தவிர்க்க வேண்டும்..

உடல்நலத்திற்கு உடற்பயிற்சியை மேற்கொள்ளுகிற விழிப்புணர்வு பெற்ற படித்தவர்கள் கூட மன நலத்திற்கான பயிற்சியைப் பற்றி யோசிப்பதில்லை. 

மனநலம் எனும் அஸ்திவாரத்தில் நின்றுகொண்டு உடல்நோயை சமாளிக்கலாம்.ஆனால் அஸ்திவாரமே ஆட்டம் கண்டால்?????

1 comment:

AK said...

நல்லா இருக்கு சார்.

Post a Comment