Total Pageviews

Friday, November 30, 2012

புது ஜனனத்தைத் தேடி


புது ஜனனத்தைத் தேடி


இதோ 
அஞ்சாத இதயம் ஒன்று....
வலுவிழந்து விட்டது......

ஓடி ஓடி 
உழைத்த "கால்கள்"
இழைப்பைத் தேடி
சோர்ந்து விட்டது....

அஞ்சாநெஞ்சனாய்
வாழ்ந்த்தவர்
இதோ---
மரணம் முன்னே தோற்று.........
புது ஜனனத்தைத் தேடி.....

பகலவன்
மறைந்து விட்டான்....
சந்திரன்
மெல்ல தலையைத் தூக்கி
மாலைப் பொழுதை
எட்டிப்பார்க்கிறான்....

கூண்டை
விட்டு ஒரு கிளி
சுகந்திரமாய்
பறப்பது போல -----

"உயிர்"

உடம்பென்னும்
சிறை கூண்டை விட்டு
சுகந்திரமாய் பிரிந்தது.....

பாவ உலகில்
பாடுபட்டு வாழ்ந்தவர்....

நிம்மதி பெருமூச்சுடன்
புறப்பட்டார்....

புது ஜனனத்தைத் தேடி........

2 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

thank god to go back home,but not to be back here....

please teach us the key for not coming back

adeep breath and full of bliss


bye
thanks for teaching master

Post a Comment