Total Pageviews

Wednesday, November 7, 2012

நான் யார்????








நான் விசித்திரமானவன்


வித்தியாசமானவன்


யாராலும் பார்க்க முடியாத


அதிசயங்களை நேரில் பார்த்தவன்


பௌர்ணமி நிலவைப் பகலில் பார்த்திருக்கிறேன்,


செவ்வாய் கிரகத்தைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன்


குளிரும் சூரியனை அருகில் பார்த்திருக்கிறேன்


மேகத்தை மூடும் வானம் பார்த்திருக்கிறேன்


பூவின் சிரிப்பை நேரில் பார்த்திருக்கிறேன்


தென்றல் காற்றைத் தழுவிப் பார்த்திருக்கிறேன்


இரவின் நடுவில் விடியல் பார்த்திருக்கிறேன்


தூக்கம் இல்லாமல் தூக்கம் பார்த்திருக்கிறேன்


தூண்டிலே மீனாகிய விந்தையைப் பார்த்திருக்கிறேன்


மீன்களின் வலையில் சிக்கிப் பார்த்திருக்கிறேன்


மீன்களின் கண்ணீரைத் துடைத்துப் பார்த்திருக்கிறேன்


மீண்டும் ஒருமுறை பிறந்து பார்த்திருக்கிறேன்


மௌனம் பேசும் கவிதைகள் பார்த்திருக்கிறேன்


கவிதை பேசும் மௌனங்கள் பார்த்திருக்கிறேன்


கனவை கனவில் தேடிப் பார்த்திருக்கிறேன்


இத்தனைப் பார்த்தும் என்னை "நான்" பார்த்ததில்லை

1 comment:

Unknown said...

so knowing the nill or space is I is this correct master

Post a Comment