அமெரிக்காவும் நமது தேசம்தான் – ஆதாரத்துடன் விளக்கம்
"அச்வமேதா யாகத்திற்க்கானக் குதிரையைத் தேடி ஸாகரர்கள் பாதாளத்தை வெட்டிக்கொண்டே போனார்கள். அப்போது உண்டான கடலே ‘ஸாகர’மாயிற்று.கடைசியில் கபில மகரிஷி ஆஸ்ரமத்திற்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள்.அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை இம்சித்தார்கள்.அவரோ ஸாகரர்களைத் தனது திருஷ்டியினால் பொசுக்கி சாம்பலாக்கினார்."- இது ராமாயணக்கதை.
நம் தேசத்துக்கு நேர் கீழே உள்ள அமெரிக்காவை பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம்(மதுரை என்பது மருதை என்று மாறியது போல)கபிலாரண்யமே-
கலிபோர்னியாவாக இருக்கலாம்.அதற்குப் பக்கத்தில் குதிரைத்தீவு(Horse Island),சாம்பல் தீவு(Ash Island) இவை உள்ளன.
ஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது.ஸகாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.ஸாகரம் தான் ஸகாராவாயிற்றோ என்று தோன்றுகிறது.
கபிலர் மகரிஷியின் ஆசிரமம்தான் இன்றைய கலிபோர்னியாவா?
ஆதாரம்:தெய்வத்தின் குரல் பாகம்-१.காஞ்சிப்பரமாச்சியார் அவர்கள் பக்கம் 168-169
(ஒபாமா அடிக்கவந்தால் ...............நான் பொறுப்பல்ல)
No comments:
Post a Comment