Total Pageviews

Saturday, November 12, 2011

இருமினாலும், தும்மினாலும், சிறுநீரா......இதைப்படிங்க!


ன்றைய கம்ப்யூட்டர் யுக மனிதர்களை, பாடுபடுத்தும்,பயப் படுத்தும் முக்கியமான ஒரு உடல் பிரச்சினை அடக்க இயலாத சிறுநீர் தொல்லை, அதிலும் நடுத்தர வயதிலுள்ள லட்சக் கணக்கான பெண்கள் பல சமயங்களில் சிறுநீர் வருவதை அடக்க முடியாமையால் அவதிப்படுகிறார்கள். நடுத்தர வயாதானவர்களில், எட்டில் ஒருவர் இந்த சிறுநீர் தொல்லையால் பாதிக்கப்படுகிறார்கள், என புள்ளி விவரங்கள் கூறுகிறது. சில பெண்களுக்கு, தும்மினாலும், சிரித்தாலும் சிறுநீர் கசியும். சிலருக்கு அடக்க முடியாமல் பெருமளவில் சிறுநீர் போகும். குளிர்காலத்தில் இந்த உபாதை அதிகமாகும். சமூகத்தில், பொது இடங்களில், சிறுநீர் வருவதை அடக்க முடியாமல் போனால்,?............ இந்த இக்கட்டான,சங்கடமான சூழ்நிலையால் பல பெண்கள் தவிக்கிறார்கள். , இது வயதாகினால் வரும் சாதாரண கோளாறு என்று எண்ணுவதாலும்,கூச்சத்தினாலும் இதனைப் பெரும்பாலான பெண்கள் வெளியில் யாரிடமும் சொல்வதில்லை, இந்த வியாதியால்,ஆண்களை விடப் பெண்கள் இரு மடங்கு அதிகமாக பாதிப்படைகின்றனர். 



சிறுநீர் கட்டுப்பாடின்மையை கவனிக்காமல் விட்டால் பல சிக்கல்கள் ஏற்படும். சிறுநீரகம், சிறுநீர்ப்பைத் தொற்றுகள் ஏற்படலாம். சிறுநீர்ப்பையில் கட்டிகள் உண்டாகலாம். சிறுநீரில் உள்ள, யூரியாவினாலும், அமிலத்தினாலும் சிறுநீர்ப்பாதையில் எரிச்சல் உண்டாகலாம். இதனால் மனரீதியான பாதிப்புகள் கூடஉண்டாகின்றன. இவர்களால் நிம்மதியாக சமூக செயல்பாடுகளில் ஈடுபடமுடியாது. மனச்சோர்வு ஏற்படும். ......... 





கவலையை விடுங்கள்! 

இந்த உபாதையை கட்டுப் படுத்தலாம், குணப்படுத்துவது கூட முடியும். 



சிறுநீரகம் உற்பத்தி செய்யும் சிறுநீர், இரண்டு குழாய்கள் மூலம் சிறுநீர் பையை வந்தடையும். சிறுநீர்ப்பை சிறுநீரை சேமித்து வைக்கிறது. சிறுநீர் பையின் “கழுத்து”, ஒரு சுருக்குப்பை போன்ற தசையால் ஆனது. இது மூடவும், திறக்கவும், கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுநீர்ப்பை நிரம்பியதும், நரம்புகள் மூலம் தண்டுவடத்திற்கு செய்தி செல்லும். மூளை உடனே சிறுநீர் கழிக்க வேண்டிய உந்துதலை உண்டாக்கும். சூழ்நிலையை பொறுத்து சிறுநீர் உடனே கழிப்பது (அல்லது) சிறிது நேரம் அடக்கிக்கொள்வது நடக்கும். இந்த அடக்கிக் கொள்ளும்,பிடித்து வைக்கும் விஷேச தன்மைக்குக் காரணமாக இருப்பது மண்ணீரல். சிறுநீர் உடனே கழித்தால் “பையின்” கழுத்து தசை விரிந்து சிறுநீரை சிறுநீர் தாரை வழியே வெளியேற்றும், சிறுநீர் பையின் தசைகளும் சுருங்கி, விரிந்து இதற்கு உதவும். இந்த செயல்பாடுக்காகவே சிறுநீர்ப்பை “பலூன்” போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பலூன் போன்ற சுருங்கி விரியும் தன்மைக்கு காரணமாக இருப்பது மண்ணீரல். 


வயது கூடக்கூட, உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. சிறுநீரகத்தின் சக்திக் குறைவினால் அதனுடைய துணை உறுப்பான சிறுநீர்பையின் தசைகள் பலவீனமடைந்து, அதில் சேமிக்கப்படும் சிறுநீரின் அளவு குறையும். சிறுநீரை அடக்கிக் கொள்ளும் திறமை குறையும். சிறுநீர்ப்பையிலுள்ள சிறுநீர் முழுவதும் வெளியேறாமல், சிறிதளவு சிறுநீர், நிரந்தரமாக பையில் தங்கிவிடும். இதன் காரணமாக நாளடைவில் பெண்களின் நீர்த்தாரை எனப்படும் “லைனிங்” நலிவடையும். சிறுநீர்ப் பையில் எப்போதுமே “தசை அசைவுகள்" (மூளையிலிருந்து கட்டளை வந்தாலும், வராவிட்டாலும்) நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இளவயதில் இந்தத் தசை அசைவுகளை, தேவை இல்லாத போது, மண்ணீரல் தடுத்து வைக்கும். வயதானால் இந்த தடுக்கும் சக்தி குறைந்து போகும். எப்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு உண்டாகும். சிறுநீர்ப்பையின் கழுத்து தசைகள் சரிவர மூடிக்கொள்ளாமல், பிடித்து வைத்துக் கொள்ளும் பலத்தை இழக்கும். 



இந்த நோயை அறிகுறிகளை பொருத்து, ஐந்து வகைகளாக பிரிக்கலாம். 

1. அடக்கமுடியாத நீர்க்கசிவு –

 திடீரென்று, தீவிரமான, அடக்க முடியாத சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றி, சிறுநீர் வெளியேறுதல். பாத்ரூமை நோக்கி ஒடுவதற்குள் நீர் கசிந்து விடும். அல்சீமர் (மறதி வியாதி) நோய், பார்கின்ஸன் நோய், பக்க வாதம் போன்ற நரம்பு நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். அளவுக்கு அதிகமான தாம்பத்ய உறவு, அளவுக்கதிகமான சுய இன்ப பழக்கம், போன்ற, சிறுநீரகச் சக்தியைக் குறைக்கும் வாழ்க்கை முறைகளே இதற்குக் காரணங்களாகும். 

இந்த வகை நோயாளிகளுக்குத் தண்ணீரைத் தொட்டால், தண்ணீரால் கை கால்கள் கழுவினால், ஏன், தண்ணீர் ஓடும் சப்தத்தை கேட்டாலே உடனே சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்! மேலும் தாம்பத்ய உறவு முடிந்த அடுத்த வினாடியே சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். சிறுநீரகமே நரம்பின் வலுவுக்குப் பொறுப்பாக இருப்பதால், சிறுநீரக சக்திக் குறைவு நரம்பு பாதிப்புகளை உண்டாக்கி இந்த நிலைக்கு காரணமாகிறது. 

இந்த வகை நோயாளிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் உடனடியாக வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் பின்னாட்களில் மிகுந்த உடல் மற்றும் மன நோய்களுக்கு ஆட்பட வேண்டியதிருக்கும். தேவையானால் இந்த வகை நோயாளிகளுக்கு யோக சிகிச்சையுடன் கூடிய "வாஜிகரணம்" என்று சொல்லக்கூடிய ஆயுர்வேத சிகிச்சையும் தேவைப்படலாம். 


இந்த வகை நோயாளிகள் சிறுநீரகச் சக்தியை அதிகப்படுத்தும் சலபாசனத்தோடு,சுப்தவஜ்ராசனம், உத்தான பாதாசனம்,ஜானுசிரசாசனம், வீரிய ஸ்தம்பன் ஆசனம்,போன்ற ஆசனப்பயிற்சிகளைச் செய்யலாம், அஸ்வினி முத்திரையோடு கூடிய சக்தி முத்திரை பிராணாயாமமும், வஜ்ரோலி முத்திரைப் பயிற்சியும் இந்த நிலை நோயாளிகளுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். 



2. அழுத்த நீர்க்கசிவு 

இருமினால், தும்மினால், சிரித்தால், ஓடினால், வேறு சில அசைவுகளால் சிறிதளவு சிறுநீர் தானாக சிந்துவது அழுத்த நீர்கசிவாகும். பெண்கள் தாய்மையுறும் காலங்களில் இந்த நிலை ஏற்பட்டால் பயப்படத்தேவையில்லை.கர்ப்பப்பையின் அளவு பெரிதாவதால் அது சிறுநீர்ப்பையை அழுத்தும்.ஆனால் பிரசவத்திற்குப் பின்னும் இந்த நிலை ஏற்பட்டால் கவனிப்பது அவசியமாகும்.

கர்ப்பப்பை என்பது பஞ்ச பூதத்தில் மண்ணின் அம்சம், மண்ணில் விழும் விதை வளர்ந்து விருட்சமாவதைப்போலக் கர்ப்பப்பையில் விழும் பீஜமே ஒரு புது ஜீவனாக உருவெடுக்கிறது. சிவராஜயோக உடற்கூற்றுத் தத்துவத்தின்படியும் அக்குபஞ்சர் எனக்கூறப்படும் குத்தூசி வைத்தியத் தத்துவப்படியும் மண்ணீரலின் கட்டுப்பாட்டிலேயே கர்பப்பை உள்ளது. பிரசவதிற்குப்பின் கர்ப்பப்பையும் , அடிவயிறும் சுருங்கித் தனது இயல்பு நிலைக்குத் திரும்ப மண்ணீரலே பொறுப்பு. மண்ணீரலின் சக்தி குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கு கர்ப்பப்பையும், அடிவயிறும் இயல்பு நிலைக்குத் திரும்புவதில்லை, இதன் காரணமாக சிறுநீர்ப் பையைச் சுற்றியுள்ள தசைகள் எப்போதும் ஒருவித அழுத்தத்துடனேயே இருக்கும். இந்த நிலை தொடரும்போது மூடி, திறக்கும் சிறுநீர்பையின் “கழுத்து” சிதைந்து சரிவர திறந்து மூட முடியாமல் போகும். எஸ்ட்ரோஜன் பெண் ஹார்மோன், மெனோபாஸ் ஏற்பட்ட பெண்களில் குறைந்து விடும். இதனாலும் யூரின் கட்டுப்படாமல் போகும். 

குண்டானவர்களின் அடிவயிற்றுத் தசைகள் சிறுநீர்ப்பையை அழுத்திக் கொண்டேயிருக்கும். இதனாலும் சிறுநீர்க்கசிவு உண்டாகும். அடிக்கடி அபார்ஷன் செய்து கொள்பவர்கள், இடுப்புப் பகுதியில் அடி அல்லது காயம் அடைந்தவர்கள், சிசேரியன், அல்லது கர்ப்பப்பையை அகற்றி அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் கட்டுப்பாடற்ற நீர்க்கசிவு ஏற்படும். 





இந்த வகை பெண்களுக்குத் தனுராசனம், உத்தித பாதாசனம், அர்த்த கர்ப்பாசனம், யோக முத்ரா,போன்ற ஆசனப் பயிற்சிகளோடு, நகுலாசனத்தோடு கூடிய சஹஜரோலி முத்திரைப்பயிற்சி(ககல் பயிற்சி) நல்ல பலனைத்தரும்.உட்டியானா பந்தம், உதாணனை செயல்படுத்தி கர்ப்பப்பையை சீரமைக்கும்.(உடலிலுள்ள, ஆயசங்கள் என்னும் பைகளின் கட்டுப்பாடு உதானனிடமே உள்ளது) சிலருக்கு குறிஞ்சிக்குழம்பு போன்ற ஆயுர்வேத மருந்துகளும் தேவைப்படலாம். 



3. நிரம்பி வழியும் நீர்க்கசிவு 

சிறுநீர்ப்பை முழுவதும் நீர் சேர்ந்தாலும் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றாது. இதனால் சிறுநீர் கழிக்கும் உணர்வு இல்லாமலே சிலருக்கு சிறுநீர் கழிந்து விடுவதுண்டு.– இந்த வகை சிறுநீர் கட்டுபாடின்மை பெண்களைப் பாதிப்பது குறைவு. 

 தண்டுவட நரம்பு பாதிப்புகள், டயாபடீஸ், ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலும் இது ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு ஆண்கள் உடலில் முக்கியமானது புராஸ்டேட்சுரப்பி. ஆனால் ஆண்களுக்கு இந்த சுரப்பியைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பது வருந்தத்தக்க செய்தி. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் 40 வயதிற்கு மேற்பட்டோரில் 60 சதவீதத்தினர் புராஸ்டேட் பிரச்சினையால் அவதியுறுகின்றனர் என்கிறது புள்ளிவிவரம். 





எனது யோக மருத்துவ ஆராய்ச்சியில் ஓர் ஆச்சர்யமான விஷயம் செருப்புத்தைக்கும் தொழில் செய்துவரும் சகோதரர்களுக்கு புராஸ்டேட் பிரச்சினை வருவதில்லை. காரணம் அவர்கள் உட்கார்ந்திருக்கும் ஒரு விசேஷ நிலை. புராஸ்டேட் சுரப்பியால் வரக்கூடிய சிறுநீர் கசிவைத்தடுக்க, பத்த கோனாசனம், கோரக்கர் ஆசனம், அபானாசனம் போன்ற ஆசனப் பயிற்சிகளோடு, வியாக்ர பிராணயாமமும் நல்ல பலன் தரும். 

4. செயல்பாடுகளால் வரும் நீர்க்கசிவு 

கேரளாவில் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் உள்ள மாணவர்களுக்குப் "புரோட்டின் யூரியா" எனும் நோய் தாக்கியது, காரணம் ஆராய்ந்ததில் ஒரு உண்மை தெரிய வந்தது. பள்ளியில் சுகாதாரமற்றச் சூல்நிலையிலுள்ளக் கழிவறைகளில் சிறுநீர் கழிப்பதை விரும்பாத மாணவர்கள் சிறுநீரை அடக்க ஆரம்பித்ததின் விளைவே புரோட்டின் யூரியா – இதுபோல சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தாலும் நீண்டநேரமாக அடக்கி வைப்பவர்களுக்கு, நாளடைவில் சிறுநீர் கசிவு நோய் ஏற்படலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு சில உடலியல் பாதிப்புகளால் உடனடியாக பாத்ரூம் ஒடுவது சாத்தியமில்லாமல் போகலாம். அதுபோல ஆர்த்தரைடீஸ், அல்சீமர் வியாதி உள்ளவர்களுக்கும் இந்த நிலை சிறுநீர் கசிவுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. “வேகங்களை அடக்கினால் சோகம்தான்” என்பது மருத்துவப் பழமொழி. அதன்படி அளவுக்கதிகமாக சிறுநீரை அடக்காமல் இருப்பதே நல்லது. 



5. தற்கலிகமான நீர்க்கசிவு 

– ஜலதோஷம், இருமல், சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்று நோய்கள், சிலவகையான மருந்துகள் ஏற்படுத்தும் ஒவ்வாமை, போதிய உடல் அசைவு இல்லாமல் இருக்கும் நிலையில்,சில வகையான பித்த நோய்கள் இவற்றாலும் சிறுநீர் கட்டுபாடின்றி போகும். டிப்ரெஷனுக்கு கொடுக்கப்படும் மருந்துகள், மனோ வியாதிக்கான மருந்துகள், மனதை சாந்தப்படுத்தும் மருந்துகள் அலர்ஜி மருந்துகள் முதலியன இந்த நோய்க்கு காரணமாக இருக்கலாம். இதனைக் கண்டறிந்து நீக்கிவிட்டால் நீர்க்கசிவு நின்று விடும். 

நோய்நாடி நோய் முதல்நாடி- அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.-  குறள்

2 comments:

Velvijayan said...

மாஸ்டர் அனைத்து பிரகிருதிக​​ளையும் இந்த நோய் தாக்குமா?
ஆழ்ந்த விளக்கம் ​தே​வை.​​

Soma Chatterjee said...

Nice Post clearly describing all yoga postures.
Soma Chatterjee
Angel Healing courses provider

Post a Comment