மாவீரன் அலெக்சாண்டரின் மனம்
பைத்தியம் பிடித்த வானரம் போல அமைதியின்றித் தவித்தது., பாரதப் பூமியை வெல்ல வேண்டும், அதில் தனது ஆட்சி அதிகாரத்தை
நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும், இதுவே அவனது சிந்தனையில்
ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அது சாத்தியமா? பாரதத்தைத் கூடப் படை
பலத்தால் வீழ்த்தி விட முடியும். மௌரிய பேரரசையும் அதன் கட்டுக்
கோப்பான படை பலத்தையும் கூட அழித்துவிட முடியும். ஆனால் அதற்குத் தடையாக
இருக்கும் சாணக்கியனின் கூர்ந்த அறிவை மழுங்கடிக்க வேண்டுமே!, அது இயலுமா?
சாணக்கியனின் அறிவுக்கூர்மையை யாராலும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என்கிறார்களே! அவர் ஆயிரம் அரிஸ்டாடிலுக்கு இணையானவர் என்கிறார்களே! அந்த மகா ஞானியின் மதி நுட்பத்திற்கு முன்னால் தனது படையின் பலம் சின்னாபின்னமாகி விடாதா? என்றெல்லாம் யோசித்து குழம்பினான், எதற்குமே அஞ்சாத அந்த மாவீரனின் நெஞ்சம் சாணக்கியரின் அறிவாயுதத்தை நினைத்த போதே சற்று நடுங்கியது.
கூடாரமடித்து மதிய வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த
படைவீரர்களையும் படுத்துப் புரண்டு கொண்டு இருந்த குதிரைகளையும் பார்த்துகொண்டே நடந்து கொண்டு இருந்த
அலெக்சாண்டருக்குத் தூரத்தில் நதிக்கரை மணலில் ஒரு நிர்வாணப் பக்கிரிப்
படுத்திருப்பது கண்ணில் பட்டது, அந்த மனிதனிடம்
செல்லவேண்டும், அவனோடு பேசவேண்டும் என்ற
உள்ளுணர்வு சட்டென ஏற்பட்டது, தனது நடையை வேகமாக்கி அந்த
மனிதன் அருகில் சென்றான் அலெக்சாண்டர்.
அலெக்சாண்டர் வந்ததையோ தனது அருகில் ராஜ உடையில் ஒருவன்வந்து நிற்பதையோ அந்த மனிதன் சட்டை செய்யவே இல்லை, அவன் தன்பாட்டிற்குக் கண்களை மூடுவதும் தனக்குள் எதையோ எண்ணிச் சிரிப்பதுமாக இருந்தான்.
அலெக்சாண்டர் அந்த மனிதனை உற்று கவனித்தான், குறுகிய தோள்களுடன், ஒல்லியான தேகமாக இருந்தாலும் அவன் கண்களிலிருந்து வெளிப்பட்ட அறிவுக் கூர்மையும், அவன் முகத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு வித தேஜசும் அவனிடம் மரியாதையை ஏற்படுத்தியது, ஆனாலும் அவனது அலட்சியமும், தன்னைக் கவனித்தும் கவனிக்காதது போல இருந்த போக்கும் அலெக்சாண்டருக்கு மனதிற்குள் சிறிது கோபத்தை ஏற்படுத்தியது.
அலெக்சாண்டர் கோபத்தைத் தனக்குள் மறைத்துக் கொண்டு அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டான்.
“யார் நீங்கள்”?.
அலட்சியமாகத் திரும்பிய அந்த மனிதனின் பதில்
“ நீ யாரோ! அவனே தான் நான் ” .
இந்த பதிலின் அர்த்தம் அலெக்சாண்டருக்குப் புரியவில்லை, ஆனாலும்
தான் ஒரு மாமுனிவன் முன் நிற்பதாக உணர்ந்தான், அந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டவுடன்
மண்டியிட்டு அவனை வணங்கினான்,
“ ஐயா நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது, உங்களது பதிலில் உள்ள ஆழமான பொருளால் நீங்கள் ஓர் மகாஞானியாக இருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன், நெருப்பை வாரி இறைத்தது போல் மணற்பரப்பெங்கும் சூரியனின் தகிப்புப் பரந்து கிடக்கிறது, ஆனாலும் நெடுநேரம் இதே இடத்தில் நீங்கள் இருப்பது போல் தெரிகிறது. , வெயில் உங்களை சுடவில்லையா?”
“ ஐயா நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது, உங்களது பதிலில் உள்ள ஆழமான பொருளால் நீங்கள் ஓர் மகாஞானியாக இருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன், நெருப்பை வாரி இறைத்தது போல் மணற்பரப்பெங்கும் சூரியனின் தகிப்புப் பரந்து கிடக்கிறது, ஆனாலும் நெடுநேரம் இதே இடத்தில் நீங்கள் இருப்பது போல் தெரிகிறது. , வெயில் உங்களை சுடவில்லையா?”
நான் கிரேக்கச் சக்கரவர்த்தி என் உத்திரவுக்காக ஆயிரம் பேர்
காத்து கிடக்கிறார்கள். நான்
திரும்பும் இடமெல்லாம் செல்வத்தையும் அழகிய பெண்களையும் தவிர வேறு எதையும் நான்
பார்த்தது இல்லை, நவரத்தினங்கள் பதித்தத் தங்கத்
தொட்டியில் உலகிலேயே அதிக நறுமணமுள்ள திரவியத்தில் குளிக்கவேண்டும் என்று நான்
நினைத்த மறுகணமே அதைப் பெற முடியும், ஏன்? உலகில்
எந்த மூலையில் நான் விரும்புவது இருந்தாலும் அதை பெற்றுவிடும் சூழல் எனக்கு உண்டு ஆனாலும்
என் மனது குழம்புகிறது, அச்சப்படுகிறது, துயரத்தால்
துடிக்கிறது, நீங்கள் பெற்று இருக்கும்
முகத்தெளிவையும் உங்கள் குரலில் உள்ள உறுதியையும் என்னால் பெறமுடியவில்லை, எதுவுமே
இல்லாமல் எப்படி நீங்கள் இந்த வரத்தை பெற்றீர்கள்?” என்று
அலெக்சாண்டர் இன்னும் எவையவையோ பேசிக் கொண்டே, இல்லையில்லை
புலம்பிக்கொண்டே இருந்தான். எல்லா
பேச்சுகளையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதன் அலெக்சாண்டரைப் பார்த்து
மெதுவாக கேட்டான்
“ நீ
யுத்தம் செய்து எதை சாதிக்கப் போகிறாய்? ”
“ என் நாட்டின் எல்லையை
விரிவுபடுத்தப் போகிறேன்,”
“ அதன் மூலம் நீ பெறுவது
என்ன,
”
“ சக்ரவர்த்தி என்ற பட்டம்! ”
“ சக்ரவர்த்தி பட்டம் உனக்கா? உன்
உடலுக்கா? ”
அலெக்சாண்டர் மௌனமானான், அவனுக்குள்
குதித்துக் கொண்டிருந்த அந்த உன்மத்த வானரம் இன்னும் அதிகமாகக் குதித்தாடியது, மன அலை
இன்னும் அதிகமானது, ஒருபுறம் சாணக்கியனைப்
பற்றிய எண்ணமும் மறுபுறம் இந்தக் கேள்வியின் தாக்கமும் அவனை காகிதப்படகு
போல் அலைகழித்தது. நீருக்குள் விழுந்தவன் மூச்சுக்கு துடிப்பது போல்
தவித்தான்.
“ ஐயா சக்ரவர்த்தி பட்டம் உயிருக்கா உடலுக்கா என்பது எனக்குப் புரியவில்லை, ஆயினும் உடலும் உயிரும் வேறு வேறானது என்பது புரிகிறது. ஆனால் உடலும் உயிரும் வேறு வேறு என்றால் உடல் இல்லாமல் உயிர் எப்படித் தன்னை வெளிப்படுத்தும்? அல்லது உயிர் இல்லாமல் உடல் எப்படி இயங்கும்? எனது குரு அரிஸ்டாட்டிலின் உபதேசத்தில் இத்தகையக் கேள்வியும் இல்லை, இதற்குப் பதிலும் இல்லை அதனால்தான் எனக்கு எதுவும் விளங்கவும் இல்லை ”
“ ஐயா சக்ரவர்த்தி பட்டம் உயிருக்கா உடலுக்கா என்பது எனக்குப் புரியவில்லை, ஆயினும் உடலும் உயிரும் வேறு வேறானது என்பது புரிகிறது. ஆனால் உடலும் உயிரும் வேறு வேறு என்றால் உடல் இல்லாமல் உயிர் எப்படித் தன்னை வெளிப்படுத்தும்? அல்லது உயிர் இல்லாமல் உடல் எப்படி இயங்கும்? எனது குரு அரிஸ்டாட்டிலின் உபதேசத்தில் இத்தகையக் கேள்வியும் இல்லை, இதற்குப் பதிலும் இல்லை அதனால்தான் எனக்கு எதுவும் விளங்கவும் இல்லை ”
அந்த
மனிதன் சிரித்தான், புறாக்கள் படபடவென
சிறகடித்துப் பறப்பது போல் இருந்தது அவன் சிரிப்பு,
“வீரனே! உடலை ஆதாரமாக வைத்து சிந்திக்கும்
போதுதான் பந்தபாசமும், பற்றும் வருகிறது, எங்கு
பற்று வந்து விடுகிறதோ அங்கே துன்பமும் துயரமும் தானே வந்து விடுகிறது, அந்தப் பற்றினால் தான் கிரேக்கத்திலிருந்து சிந்து நதிவரை நீ ஓடிவந்திருக்கிறாய், அதோ
அங்கே உனது பாசறையில் ஓய்வெடுக்கும் வீரர்களையும் குதிரைகளையும் பார்.
குதிரைகளின் முகத்தில் உள்ள
மலர்ச்சி உன் வீரர்களுக்கு இல்லை ஏன்? ஒரு
நிமிடம் சிந்தித்துப் பார், குதிரைகளுக்கு
மரண பயம் இல்லை, உன் வீரர்களுக்கு நடைபெற
போகும் யுத்தத்தில் ஏற்படப்போகும் சாக்காட்டைப் பற்றிய மரணபயம் முகத்தை
வாடச்செய்திருக்கிறது, குதிரைகளுக்கு
இல்லாத மரண பயம் மனிதர்களுக்கு அறிவு வளர்ச்சியாலா வருகிறது? இல்லை, மகனே இல்லை, சரீரத்தின் மேல் கொண்ட
பற்றுதலால் வருகிறது, சரீரங்களால்
தான் வாழமுடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள், அதனால்
தான் துக்கப்படுகிறார்கள்,
“ நீ வெறும் சரீரமல்ல, சரீரம் என்பது ரதம் போன்றது, அந்த ரதத்தை இழுத்துச் செல்லும் குதிரை ஆத்மாவாகும், குதிரை இழுக்கிறது, ரதம் செல்கிறது, ஆனாலும் ரதம் நினைத்துக் கொள்கிறது தன்னால் தான் குதிரை ஓடுகிறது என்று, உண்மையில் குதிரைதான் ரதத்தை இழுக்கிறது, அதே போன்று தான் உனது உடலை உன் ஆத்மா இயக்குகிறது, நீ உடல் அல்ல ஆத்மா என்பதை அறிந்து கொள் ”
“ நீ வெறும் சரீரமல்ல, சரீரம் என்பது ரதம் போன்றது, அந்த ரதத்தை இழுத்துச் செல்லும் குதிரை ஆத்மாவாகும், குதிரை இழுக்கிறது, ரதம் செல்கிறது, ஆனாலும் ரதம் நினைத்துக் கொள்கிறது தன்னால் தான் குதிரை ஓடுகிறது என்று, உண்மையில் குதிரைதான் ரதத்தை இழுக்கிறது, அதே போன்று தான் உனது உடலை உன் ஆத்மா இயக்குகிறது, நீ உடல் அல்ல ஆத்மா என்பதை அறிந்து கொள் ”
“ ஐயா, ஆத்மா
என்றால் என்ன? ”
“ சிலர் அதை உயிர்
என்கிறார்கள், வேறு சிலர் அது உயிரை
இயக்கும் சக்தி என்கிறார்கள், இது
வாதம்தான் ஆனால் ஆத்மாவை உணர்ந்தவர்கள் அது விவரிக்க முடியாத மாபெரும் சக்தி
என்கிறார்கள், ஆத்மாவால் உயிர்
இயங்குகிறதா? அல்லது உயிரே தான் ஆத்மாவா? என்பதை
அறுதியிட்டுக் கூற பலபேர் முயன்று வருகிறார்கள், ”
“ ஆனாலும் இன்னும் முடிவுக்கு யாரும் வந்தபாடில்லை, இனிமேலும் யாரும் வரமுடியாது என்றே நான் கருதுகிறேன், என்னைப் பொருத்தமட்டில் ஆத்மா உயிராகவும் இருக்கிறது உயிரை இயக்குவதாகவும் இருக்கிறது, ஆத்மாவை நான் கடவுள் என்கிறேன், காணும் பொருள் எல்லாம்-மரம், செடி, புழு பூச்சி, இந்த மணல், அந்த ஆறு, அங்கு நிற்கும் குதிரைகள், நீ, நான், எல்லாமே கடவுள் என்ற பேரத்மாவின் சிறு அம்சங்களே என்றே நான் உணருகிறேன், ”
“ அதாவது கடவுளின் தன்மை உனக்குள்ளும் உள்ளது எனக்குள்ளும் உள்ளது மற்ற எல்லா உயிரினங்களிலும் அந்தத் தன்மை உறைந்து மறைந்து கிடக்கிறது, அதை உணர வேண்டும், வைக்கோல் பொதிக்குள் ஊசியைக் தேடுவது போல் சரீரத்திற்குள் சென்று ஆத்மாவை தேடு, தேடி அதை அடைவது சற்று சிரமமான காரியந்தான், ஆனாலும் முடியாத காரியம் இல்லை, நீ வெற்றிகளை மட்டுமே இதுவரை கண்டு இருக்கிறாய், சரீர சுகத்திற்கானக் காரணங்கள் மட்டுமே உனக்கு காட்டப்பட்டு இருக்கிறது, நாடும் நகரமும் அதிகாரமும் பதவியும் மட்டுமே அறிந்தவனாக இருக்கிறாய், ”
“ உன்னைவிடச் சிறந்தவன் உன்னைவிடப் பராக்கிரமசாலி யாருமே இல்லை என்று உனக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது, அதனால் தான் உன்னை விட மேலான சாணக்கியனைப் பற்றி கேள்விப்படும் போது அச்சப்படுகிறாய், அதனால் துயரம் ஏற்படுகிறது, ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள், உனக்கு மேலானவர் எவரும் இல்லை, கீழாகவும் யாரும் இல்லை. வானத்திற்குக் கீழே பூமிக்கு மேலே எல்லாமே சமமானது, எவருமே சரி நிகர் சமமானவர்கள், இந்த சமநோக்கு உனக்கு வரவேண்டுமென்றால் உள்நோக்கு என்பது முதலில் வரவேண்டும், உன் ஆசைகளை உற்றுப் பார், உன் அழுகைகளை ஆழமாக நோக்கு, உன் அறிவைப் பகிர்ந்துபார், அப்போது புரியும் அவை எல்லாமே அர்த்தமற்ற ஒரு நாடகம் என்று,”
“ ஆனாலும் இன்னும் முடிவுக்கு யாரும் வந்தபாடில்லை, இனிமேலும் யாரும் வரமுடியாது என்றே நான் கருதுகிறேன், என்னைப் பொருத்தமட்டில் ஆத்மா உயிராகவும் இருக்கிறது உயிரை இயக்குவதாகவும் இருக்கிறது, ஆத்மாவை நான் கடவுள் என்கிறேன், காணும் பொருள் எல்லாம்-மரம், செடி, புழு பூச்சி, இந்த மணல், அந்த ஆறு, அங்கு நிற்கும் குதிரைகள், நீ, நான், எல்லாமே கடவுள் என்ற பேரத்மாவின் சிறு அம்சங்களே என்றே நான் உணருகிறேன், ”
“ அதாவது கடவுளின் தன்மை உனக்குள்ளும் உள்ளது எனக்குள்ளும் உள்ளது மற்ற எல்லா உயிரினங்களிலும் அந்தத் தன்மை உறைந்து மறைந்து கிடக்கிறது, அதை உணர வேண்டும், வைக்கோல் பொதிக்குள் ஊசியைக் தேடுவது போல் சரீரத்திற்குள் சென்று ஆத்மாவை தேடு, தேடி அதை அடைவது சற்று சிரமமான காரியந்தான், ஆனாலும் முடியாத காரியம் இல்லை, நீ வெற்றிகளை மட்டுமே இதுவரை கண்டு இருக்கிறாய், சரீர சுகத்திற்கானக் காரணங்கள் மட்டுமே உனக்கு காட்டப்பட்டு இருக்கிறது, நாடும் நகரமும் அதிகாரமும் பதவியும் மட்டுமே அறிந்தவனாக இருக்கிறாய், ”
“ உன்னைவிடச் சிறந்தவன் உன்னைவிடப் பராக்கிரமசாலி யாருமே இல்லை என்று உனக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது, அதனால் தான் உன்னை விட மேலான சாணக்கியனைப் பற்றி கேள்விப்படும் போது அச்சப்படுகிறாய், அதனால் துயரம் ஏற்படுகிறது, ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள், உனக்கு மேலானவர் எவரும் இல்லை, கீழாகவும் யாரும் இல்லை. வானத்திற்குக் கீழே பூமிக்கு மேலே எல்லாமே சமமானது, எவருமே சரி நிகர் சமமானவர்கள், இந்த சமநோக்கு உனக்கு வரவேண்டுமென்றால் உள்நோக்கு என்பது முதலில் வரவேண்டும், உன் ஆசைகளை உற்றுப் பார், உன் அழுகைகளை ஆழமாக நோக்கு, உன் அறிவைப் பகிர்ந்துபார், அப்போது புரியும் அவை எல்லாமே அர்த்தமற்ற ஒரு நாடகம் என்று,”
“ நீனும் நானும் மற்ற எல்லா
மனிதர்களும் இத்தகைய அர்த்தமற்ற நாடகத்தைதான் நடத்திக் கொண்டு இருக்கிறோம் அல்லது
நடித்துக் கொண்டு இருக்கிறோம்,”
இப்போது அலெக்சாண்டர்
கேட்டான்,
“ வாழ்க்கை என்பது நாடகம்
தானா? நாம் வெறும் நடிகர்கள் தானா? அப்படி
என்றால் இந்த நாடகத்தில் கதாசிரியன் யார்? அவன்
எங்கே இருக்கிறான்? எப்படி இருப்பான்? ”
ஞானி மீண்டும் சிரித்தான்,
ஞானி மீண்டும் சிரித்தான்,
“நான் முதலிலேயே சொன்னேன்
பெரும் ஆத்மாவின் சிறு துளிதான் நாம் என்று அந்த பெரும் ஆத்மாதான் நாடக ஆசிரியன்
அப்படி என்றால் நீனும் நானும் கூடக் கதாசிரியன் தான், பரமாத்மா
பாத்திரங்களை உருவாக்கித் தருகிறான், நாம்
பாத்திரத்தின் இயல்பறிந்து அதற்கு தகுந்தாற்போல் பாவனை செய்கிறோம், இந்த
மரம் மரமாக நடிக்கிறது, நீ
மன்னனாக நடிக்கிறாய், நான்
ஞானியாக நடிக்கிறேன், மரம்.
மன்னன். ஞானி என்று பெயர்கள் வேறுபட்டாலும் அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான், ”
“அதாவது சரீர சம்பந்தம் இருப்பதனால் எல்லாமே ஜீவாத்மாக்கள் தான், இதைப் புரிந்து கொள், இப்போது புரிந்ததை விட இன்னும் ஆழமாகத் தனிமையில் புரிந்து கொள், அப்போது ஞானம் பிறக்கும், அந்த ஞானம் இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி காதல், மோதல் எல்லாமே ஒன்றுதான் என்பதை உணரவைக்கும், அப்படி உணரும் போது நீ ஏன் கவலைப்படுகிறாய், நான் ஏன் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்கும், அவஸ்தைகள் என்பது உடம்புக்குத்தான் நமக்கு இல்லை என்ற புத்தி தெளிவு ஏற்படும் போது வெய்யில் உன்னை சுடாது பனி உன்னை குளிர்விக்காது எந்த மாற்றமும் இல்லாத சமுத்திரத்தைப் போல் எப்போதும் நீ ஆழமாக இருப்பாய் ஆனந்தமாகவும் இருப்பாய்,”
“அதாவது சரீர சம்பந்தம் இருப்பதனால் எல்லாமே ஜீவாத்மாக்கள் தான், இதைப் புரிந்து கொள், இப்போது புரிந்ததை விட இன்னும் ஆழமாகத் தனிமையில் புரிந்து கொள், அப்போது ஞானம் பிறக்கும், அந்த ஞானம் இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி காதல், மோதல் எல்லாமே ஒன்றுதான் என்பதை உணரவைக்கும், அப்படி உணரும் போது நீ ஏன் கவலைப்படுகிறாய், நான் ஏன் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்கும், அவஸ்தைகள் என்பது உடம்புக்குத்தான் நமக்கு இல்லை என்ற புத்தி தெளிவு ஏற்படும் போது வெய்யில் உன்னை சுடாது பனி உன்னை குளிர்விக்காது எந்த மாற்றமும் இல்லாத சமுத்திரத்தைப் போல் எப்போதும் நீ ஆழமாக இருப்பாய் ஆனந்தமாகவும் இருப்பாய்,”
“நான் மெலிந்தவன் என்று
எண்ணும் போது வலிமையை கண்டு பயம் வரும், வலிவும்
மெலிவும் ஒன்றுதான் என்ற ஞானம் வரும்போது துயரமும் துன்பமும் ஓடிப்போகும் உன்
உடம்பிற்குள் இருந்து நீ வெளியில் வா அப்போதுதான் சாணக்கியனும் சாமான்யனும்
ஒன்றாகப்படுவார்கள்,”
சந்திரனை மறைத்துக்
கொண்டிருந்த மேகத்திரை விலகி குளிர்ந்த கதிர்கள் பரவுவதைப் போல் அலெக்சாண்டரின்
மனக்குழப்பம் விலகியது, சாம்ராஜ்ய
பெரும் கனவும், சாணக்கியனின் பேரச்சமும் ஓடி மறைந்தது,
ஞானியிடம் அலெக்சாண்டர்
முடிவாக கேட்டான், “ஐயா தாங்கள்
யார்”
ஞானி சொன்னான்
“நான் சாணக்கியனின்
உதவாக்கரைச் சீடன்”
இப்போது அலெக்சாண்டருக்கு
முற்றிலுமாக குழப்பம் நீங்கியது, சரீரபற்று
விலகினால் துயரம் விலகும் என்பதை முழுமையாக நம்பினான்.
காலம் கடந்தது.
“இதோ ஒரு சவ ஊர்வலம் போகிறதே யார் இறந்தது.
சவப்பெட்டிகூட வித்தியாசமாக
இருக்கிறதே. சவப்பெட்டியின்
இருபக்கமும் சவத்தின் கைகள் திறந்தவண்ணம் தொங்கிக்கொண்டிருக்கின்றனவே. என்ன
நடந்தது.”
“இது மாவீரன்
அலெக்ஸ்சாண்டரின் இறுதி ஊர்வலம். அவனது
கைகள் சவப்பெட்டியின் வெளியே தொங்க விடப்பட்டிருக்கிறது. உலகையே
வென்ற அவனது கைகள் போகும்போது எதையும் கொண்டு போகவில்லை என்பதை மக்கள் உணர்ந்து
கொள்ளவேண்டும் என்பதே அந்த சக்ரவர்த்தியின் இறுதி ஆசை”
4 comments:
This is not only a lesson to Alexander,but for all of us.Thank u master for the wonderful article.
நன்றி விஜிராஜா
அறிவுக்கு எட்டுவது உணர்வுக்கு எட்டும் நாள் எந்நாளோ ?
Thank you wonderful sharing
Post a Comment