Total Pageviews

Wednesday, August 31, 2011

தோப்புக் கரணம் போடுங்க!

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

"பிள்ளையார் சதுர்த்திக்கு என்ன செய்ய வேண்டும் ?" இப்படி மின்னஞ்சலில் ஒரு கேள்வி!


உருப்படியா ஒரு காரியம், தோப்புக்கரணம் போடுங்க!

உடலின் பிரதான பகுதி மூளை. அதில் மிக முக்கியப் பகுதி, 'டெம்போரல் லோப்'. ஞாபகசக்தியைப் பராமரிப்பது இந்தப் பகுதிதான், அதுபோல

உடலின் முக்கிய நரம்புகளின் செயல்பாட்டைச் சீராக்கும் சக்தி மையம், நமது காதுகளின் கீழ்ப்பகுதியில் உள்ள மடல்கள்.

இந்த இரு பகுதிகளையும் சீராக இயங்க வைக்க ஈஸியான வழி : தோப்புக்கரணம் போடுதல்!

பிள்ளையார் முன்பு நின்று தோப்புக்கரணம் போட்டு வழிபடச் சொல்கிறது, நமது பாரம்பரிய ஆன்மிகம். 'இது வெறும் வழிபாடு மட்டுமல்ல. ஆரோக்கியம் அறிவுக்கான மருத்துவ முறை' என்று நம்மவர்கள் சொன்னால், கேட்பது யார்? இப்போது, சர்வதேச்ப் புகழ் பெற்ற அமெரிக்காவின் யேல் மருத்துவப் பல்கலைக் கழகம் இதே விஷயத்தைச் சொல்கிறது...

தோப்புக்கரணத்தின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்த இந்தப் பல்கலை., டாக்டர்கள் குழு, 'தினமும் காலையில் 20 முறை தோப்புக்கரணம் போட்டால் போதும். காது மடல்களைப் பிடித்து நெற்றியில் குட்டிக் கொள்ளும்போது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம். அதோடு, மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும்; உடல்நலனும் மேம்படும்' என்று அறிவித்துள்ளது. இதோடு, இதற்கு 'சூப்பர் பிரைன் யோகா' என்று ஒரு புதுப் பெயர் சூட்டி, மருத்துவப் பாடத்திட்டத்திலும் இணைத்துள்ளனர். ஆரோக்கியம், அறிவு அதிகரிக்கணும்னா, இந்த பிள்ளையார் சதுர்த்தியிலிருந்து தினமும் தோப்புக்கரணம் போடுங்க!










2 comments:

suganya shankar said...

Sir

Please explain why thopukaranam is performed only in front of Lord Ganesha?

Thanks
Shankar

Pradeep said...

Respected Sir,

During Stress situation, I am feeling the pain in my forehead and restless in my thinking..etc

In such situation, How should I handle the situation. Pls tell me a simple technique which will help me .

Post a Comment