Total Pageviews

226,751

Wednesday, April 13, 2011

சாயா புருஷ தரிசனம்





சாயா புருஷ தரிசனம் என்றால் என்ன?




நிழலுடன் பேசும் கலையைச் சித்தர்கள் அறிந்திருந்தனர். இதற்கு "சாயா புருஷ தரிசனம்" எனப்பெயர்.

தொலைகாட்சிப் பெட்டிக் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அதைப் பற்றி நம்மிடம் பேசினால் கொஞ்சம் ஆச்சரியமும், சந்தேகமும் கலந்துதானேப் பார்த்திருப்போம். அதுபோல இப்போது இந்த சாயா புருஷ தரிசனம் பற்றிப் பேசினால் ஆச்சரியமும், கொஞ்சம் சந்தேகமும்தான் உண்டாகும்.

அனுமன், கடலைத் தாண்டும்போது அரக்கி ஒருத்தி அவரது நிழலைப் பிடித்து இழுத்தாளாம். ஆம், மனிதனுக்கும் நிழலுக்கும் தொடர்பு உண்டு. இதைத்தான் சாயா புருஷ தரிசனம் என்கிறோம். எதிர்காலத்தில் விஞ்ஞானமும் இதை நிருபிக்கக்கூடும்.

ராணிப்பேட்டையை அடுத்த திருவல்லத்தில் வாழ்ந்து சமாதியடைந்தவர் திருவல்லம் சாமிகள். அழுக்குத்துணிகளை வெளுக்கும் குடும்ப்பத்தில் பிறந்து மக்களின் மன அழுக்கை நீக்குவதற்காகப் பிறப்பெடுத்தவர் சாமிகள். சாக்கையே(கோணி) கோவணமாக அணிந்து கொண்டவர் . கொஞ்ச நாட்கள் மௌனியாகவும் இருந்திருக்கிறார்.    திருநீறும் வில்வமும் கொடுத்தே பல தீராத வியாதிகளையும் தீர்த்திருக்கிறார் .


ஒருமுறை சாமிகளைத் தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், விமானத்தில் வெளியூர் செல்ல இருப்பதைத் தெரிவித்தார். சாமிகளோ "அந்த விமானத்தில் செல்ல வேண்டாம்" என்று தடுத்தார். மறுநாள் அந்த விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியானது. அதிர்ந்து போன பக்தர், "எப்படி தெரியும் சாமி?" எனக் கேட்டார்.


சூரிய நிழலைக் காட்டிய சாமிகள், "இந்த சாயா புருஷன் எப்போதும் என்னுடன் பேசுவார். நடக்கப் போவதை அவரே தெரிவித்தார்" என்றார்.


பிரபஞ்ச ரகசியம் அவதூதர்களுக்கேத் தெரியும். நாம் இந்த அவதூதர்களின் மூலமாகவே பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும் யுக்தியை உணரமுடியும்.

பலகோடி ஜென்மங்களில் செய்த புண்ணிய பலன் காரணமாக ஒருவருக்கு ஒரு அவதூதரின் தொடர்பு கிடைக்கும். அந்த அவதூதரின் தொடர்பால் மட்டுமே வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.







கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்

விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்?

                                                                                                                           ---பத்திரகிரியார்





1 comment:

Edward Packiaraj said...

சாயா தரிசனம் காண்பது எப்படி https://vinganam.blogspot.com/p/shadow-5-10-1.html

Post a Comment