Total Pageviews

227,837

Thursday, April 14, 2011

சிவமாகு!


சிவம் ஆகு!!

கடலின் ஆழம் !
ஊமையின் கனவு !! 
ஆகாய விரிவு!! 
மகளிர் மனம்!!
அறுதி இட்டு கண்டவர் உண்டோ? 
தீயினுள் சென்றது சாம்பல்!!
நல்வினையும் தீவினையும் வேறு வேறு எதுவும் வேண்டாதவருக்கு !!
நரை..திரை ..மூப்பு எல்லாம் நாறும் நம் உடல் அதற்கே!!
நான்கும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...
தன்னை உணர்ந்தவர் யாரும் இன்று உண்டோ? 
உடல்..பொறி..மனம் கடந்து "தன்னை உணரும்" ...
உண்மைஉணரும் காலமும் வருமோ??
இவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவமென்றால் 
ஆண் பெண் பேதம் ஏது? 
பக்குவமே பரமன் !!
மன பக்குவமே பரமன்!! 
தேர்ந்து தெளிந்து விடு!!
சிவம் ஆகு!!

No comments:

Post a Comment