Total Pageviews

228,113

Thursday, January 13, 2011

மீராவின் கவிதை

அக பக்தி




தினமும் குளிப்பதனால்தான்

ஹரியை அடைய முடியுமெனில்

நீரில் வாழும் விலங்குகள்

ஹரியை அடைந்துவிட்டனவா?



பழங்களையும், கிழங்குகளையும் உண்டால்தான்

ஹரியை அடைய முடியுமெனில்

வெளவால்களும், குரங்குகளும்,

ஹரியை அடைந்து விட்டனவா?



துளசிச் செடியை வணங்குவதால் தான்

ஹரியை அடைய முடியுமெனில்

நான் துளசித் தோட்டத்தையே வணங்குவேனே!



கல்லை வணங்குவதால் தான்

ஹரியை அடைய முடியுமெனில்

நான் மலையையே வணங்குவேனே!



இலைகளையும் தழையையும் தின்றால்தான்

ஹரியை அடைய முடியுமெனில் ஆடுகள்

ஹரியை அடைந்து விட்டனவா?



பாலை மட்டும் அருந்தினால் தான்

ஹரியை அடைய முடியுமெனில்

கன்றுகள் ஹரியை அடைந்துவிட்டனவா?



புறச் சாதனங்களால் அல்ல

உண்மையான அன்பினாலேயே

நந்தகோபனை அடைய இயலும்.



அன்னை மீராபாய்

No comments:

Post a Comment