Total Pageviews

228,338

Tuesday, January 17, 2012

பொங்கல் புத்தாண்டே...







பூமிப்பந்தே!


சூரியனை மற்றொருமுறைச் சுற்றிவந்ததற்க்காய்
பெருமிதம் கொள்ளாதே.

நீ ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதற்குள்,
நான் பலமுறை வாழ்க்கையைச் சுற்றி வந்துவிட்டேன்.

துரோகத்தின் ஆழம் கண்டிட்டேன்!
துயரத்தின் உச்சமும் துய்த்திட்டேன்.

உறவுகளின் அருமை கண்டிட்டேன்!
உறவற்ற வெறுமையும் சந்தித்தேன்.

அழுதேன்... சிரித்தேன்...
ஆர்ப்பறித்தேன்... அல்லலுற்றேன்...

துரோகங்களை அனுபவங்களாக்கினேன்!
அனுபவங்களை நினைவுகளாய்ச் சுமக்கின்றேன்.

வேண்டிய ஞானம் பெற்றேன்.
வேண்டாததைத் துறக்கத் துணிந்தேன்.

என் பேனாவின் கண்ணீர்த்துளிகளால்
காகிதம் நனைகிறது.

இது அழுகையா? ஆனந்தமா?
எதுவாயினும், இதுவும் கடந்து போகும்.

அடுத்த நொடியே ஆச்சர்யம் என்கையில்,
அடுத்த வருடம் எம்மாத்திரம்?

வருக பொங்கல் புத்தாண்டே!

No comments:

Post a Comment